ஜெயம் என அழைக்கப்படும், யாழ் செம்மணி வீதியைச் சேர்ந்த 66 வயதான இராமையா ஜெயராசா என்ற தவில் வித்துவானே, சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஐந்து பிள்ளைகளின் தந்தையாரான இவர், கடந்த 17ஆம் திகதி வியாழக்கிழமை மாலை முதல் காணாமல் போனதாக உறவினர்கள் பொலிஸாரிடம் முறையிட்டிருந்தனர்.
இந்த நிலையில், தவில் வித்துவான் ஜெயராசா சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ் போதனா வைத்தியசாலையின் சவச்சாலையில் ஒப்படைத்துள்ளனர்.
கொலையா, தற்கொலையா அல்லது விபத்துச் சம்பவமா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் என்று கூர்மை செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.
அதேவேளை யமுனா ஏரியில் பாதுகாப்பு வேலிகள் போடப்படவில்லை என்றும் முன்னரும் பலர் இந்த ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.