குறித்த நபர் காண்பித்த ஆவணம் தொடர்பாக மேலும் ஆராய வேண்டும் எனவும் கடற்கரையை அண்டிய பகுதியில் கொட்டில்கள் அமைப்பது, மண்மேடுகளைச் சமப்படுத்துவது போன்ற செயற்பாடுகளுக்கு கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் முன் அனுமதி பெறப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளினால் அறிவுறுத்தப்பட்டது.
மண்மேட்டைச் சமப்படுத்த பயன்படுத்தப்பட்ட கனரக வாகனமும் அக்கரைப்பற்றில் உள்ள இலங்கைப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
சாரதியும் கைது செய்யப்பட்டார். அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த சிறிய கொட்டிலும் அகற்றப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணம் அம்பாறையில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள், பொதுக் காணிகள், திட்டமிடப்பட்ட முறையில் சில குழுக்களினால் அபகாிக்கப்பட்டு வருகின்றன.
இலங்கைப் பொலிஸாரின் உதவியுடன் மண் அகழ்ந்து எடுக்கப்பட்டு கொழும்புக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் ஏற்கனவே முறைப்பாடுகளும் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.