அச்சத்தின் மத்தியிலும் பிரதேச இளைஞர்கள் சிறிய ஒளி விளக்குகளுடன் சந்தேகமான பகுதிகளில் தேடுதல் நடத்தியுள்ளனர்.
ஆனாலும் எவரையும் கண்டு பிடிக்க முடியவில்லை என்றும் செட்டியார்மட பிரதேசவாசி ஒருவர் கூறினார்.
இலங்கைப் பொலிஸாருக்கு அறிவித்தாலும் அவர்களின் செயற்பாடுகளில் நம்பிக்கை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்த மர்ம மனிதர்கள், குள்ள மனிதர்கள் இரவில் நடமாடுவதற்கு இலங்கைப் படையினரின் ஒத்துழைப்பு இருப்பதாக பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
யாழ் அராலியில் குள்ள மனிதர்களை பிடிப்பதற்கு இரவில் காவலுக்கு நின்ற இளைர்களை வீடுகளுக்குச் செல்லுமாறு வீதியில் ரோந்து சென்ற இலங்கைப் பொலிஸார் கூறியிருந்தனர்.
அராலி பிரதேசத்தில் கடந்த வாரம் குள்ள மனிதர்கள் எனச் சந்தேகிக்கப்படும் மர்ம மனிதர்களினால் வீட்டு வேலி ஒன்றும் எரிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வட்டுக்கோட்டை, அராலி பிரசேங்களிலும் அதைச் சூழவுள்ள பகுதிகளிலும் வாழும் இளைஞர்கள் குள்ள மனிதர்களையும் மர்ம மனிதர்களின் நடமாட்டங்களையும் பிடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.