ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பிரதேசத்தில் பெருமளவு இலங்கைப் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். வீதிப் போக்குவரத்துகளும் தடைப்பட்டுள்ளன.
இந்தப் போராட்டத்தினால் ஐந்துக்கும் அதிகமான தோட்டங்கள் பாதிகப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் பணிக்குச் செல்லாமல் புறக்கணித்துள்ளனர்.
உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக அனைத்து தொழிலாளர்களும் மைதானத்தைச் சுற்றி அமர்ந்துள்ளனர். லயன்களில் குடியிருக்கும் தமது காணிகள் சொந்தமாக வழங்கப்பட வேண்டும் எனவும் அல்லது வேறு காணிகளை வழங்குமாறும் தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உண்ணாவிரத போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு வந்து நேர்மையான வாக்குறுதிகள் வழங்கத் தவறினால், சகலரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்படப் போவதாகவும் தொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதேவேளை, உண்ணாவிரதம் இருக்கும் இருவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு்ள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தப் போராட்டம் தொடர்பாக நுவரேலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
ஆனால், தமிழ் அரசியல் பிரதிநிதிகளில் தங்களுக்கு நம்பிக்கை இல்லையென போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் தெரிவிக்கின்றனர்.