இதனால் மன்னார் பொது வைத்தியசாலையில் தமக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி தாக்குதலுக்கு உள்ளான வைத்தியர் மற்றும் மன்னார் பொது வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் ஆகிய இருவரும், கடந்த வியாழக்கிழமை இரவு வைத்தியசாலையில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையிலான மூன்று தினங்களில் மாத்திரம் மகப்பேற்றிற்காக மன்னார் பொது வைத்தியசாலைக்கு வருகை தந்த 22 கர்ப்பிணித் தாய்மார்கள் அம்புலான்ஸ் மூலம் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணித் தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் மேலதிகமாக உள்ள கர்ப்பிணித்தாய்மார்கள் யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்படுவதாக வைத்தியசாலைத் தகவல்கள் கூறுகின்றன.
மன்னார் பொது வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் கடந்த வியாழக்கிழமை இரவு வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளமையே குறித்த பிரச்சினைகளுக்கு காரணம் என வைத்தியசாலை நிர்வாகம் கூறியுள்ளது.
நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என மன்னார் பொது வைத்தியசாலை நிர்வாகம் கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.