இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டுக்குள் புகுந்து அட்டகாசம் புரிந்த இரண்டு இலங்கை இராணுவச் சிப்பாய்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.
வீட்டுக்குள் நுழைந்த இலங்கை இராணுவச் சிப்பாய்களைக் கண்டு, வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டனர். இதனால் அயலவர்கள் குறித்த வீட்டுப் பக்கம் ஓடிச் சென்றபோது, அங்கிருந்த இராணுவச் சிப்பாய்கள் இருவரை மடக்கிப் பிடித்தனர்.
அவ்வாறு மடக்கிப் பிடிக்கப்பட்ட இலங்கை இராணுவச் சிப்பாய்கள் இருவரையும் பொதுமக்கள் முழங்காவிலில் உள்ள இலங்கைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஆனாலும், இலங்கைப் பொலிஸார் சரியான நடவடிக்கை எடுப்பார்களா இல்லையா என்பது குறித்து மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதனால் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என பிரதேச மக்கள் கேட்டுள்ளனர்.
மக்கள் குடியிருப்புப் பகுதியில் இலங்கை இராணுவத்தின் முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளமையே இவ்வாறான குற்றச் செயல்களுக்குக் காரணம் என்றும் முகாமை அகற்ற வேண்டும் எனவும் பிரதேச மக்கள் கேட்டுள்ளனர்.