மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்படும் போது இப்பாதையை பயன்படுத்துவது மிகவும் கடினம். உயிரைப் பணயம் வைத்துத் தான் மக்கள் போக்குவரத்துச் செய்தனர்.
போரினால் பாதிக்கப்பட்ட இந்தக் கிராமத்தில் தற்போது மீளக் குடியேறிய மக்கள் தமது ஜீவனோபாயத் தொழிலான விவசாயத்தை செய்வதற்கு உயிராபத்துமிக்க இப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.
தேர்தல் காலங்களில் இந்தக் கிராமங்களுக்கு வரும் அரசியல்வாதிகளிடம் கிராமத்தின் அத்தியாவசியமான போக்குவரத்து தொடர்பாக கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஆனால், இதுவரைக்கும் நிறைவேற்றப்படவில்லை. எனினும், கிண்ணையடி பிள்ளையார் ஆலய நிர்வாக சபை, மக்களின் தேவை கருதி ஆலயத்தின் சார்பாக சிறிய வகை தோணிகளை போக்குவரத்துக்காக பயன்படுத்தி வருகின்றது.
ஆனாலும் இதுவும் பாதுகாப்பான போக்குவரத்து என்று கூறமுடியாது. மக்களின் இந்தக் கஷ்டங்களை தீர்க்க அரசியல்வாதிகள் தலையிட்டு இப்பகுதியிலிருந்து செல்வதற்காக நிரந்தர பாலம் ஒன்றை அமைத்துத் தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.