அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் உண்ணாவிரதம் இருந்து வரும் எட்டு தமிழ் அரசியல் கைகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கடந்த ஒன்பது வருடங்களுக்கும் மேலாக விசாரணையோ விடுதலையோ இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
தற்போதும் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகள் எட்டுப்பேரில் ஒருவர் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையின் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சிவசுப்பிரமணியம் தில்லைராஜா என்ற கைதியே, நேற்று முன்தினம் மாலை, வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்தக் கைதி நீரழிவு நோய்க்கு உள்ளாகியதாகவும் சிகிச்சைக்காகவே அங்கு இடமாற்றம் செய்யப்படடதாகவும் இலங்கைச் சிறைச்சாலை அதிகாரிகள் கூறுகின்றனர்.
எட்டு வருடங்களாக இந்தக் கைதி அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக உறவினர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.
இலங்கையின் அனைத்துச் சிறைச்சாலைகளிலும் சுமார் 220 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இரகசிய முகாம்களிலும் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு கூறியுள்ளது.