பொதுமக்களிற்கு சொந்தமான பெறுமதியான தோட்டக்காணிகள் மற்றும் தென்னந் தோட்டங்கள் ஆகியனவும் சுவீகரிக்கப்பட்ட காணிகளில் அடங்குகின்றன.
அண்மைக்காலங்களில் இலங்கை முழுவதும் நிலவிய வரட்சியினால் நாடளாவிய ரீதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட தேக்க நிலை காரணமாக இலங்கை தேசிய மின் உற்பத்தியில் பாரிய ஸ்தம்பித நிலை உருவாகியது.
இந்நிலையில் இலங்கையில் பல முக்கிய நகரங்களில் தொடர் மின் வெட்டுகளை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தியது. இதனால் அரச தனியார் தொழில் முயற்சிகளில் பாரிய முடக்கநிலை ஏற்பட்டிருந்தன.
இதனால் தொழிற்துறைகளில் பல மில்லியன் ரூபா பெறுமதியான நட்டம் ஏற்பட்டது. இந்தச் சூழ்நிலையிலேயே இலங்கை அரசாங்கம் எதிர்கால வரட்சி நிலை மற்றும் அதனை தொடர்ந்து இலங்கை எதிர்நோக்கிவரும் மின் தடை ஆகியவற்றில் இருந்து மீள்வதற்கு குறித்த காற்றாலைகள் தமிழர் தாயகமான வடமாகாணம் மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ளது.
இதற்காக இலங்கை அரசாங்கத்தின் அனுமதியுடன் கொழும்பை மையப்படுத்திய தனியார் நிறுவனம் ஒன்று நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.