இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை

கடும் மழையினால் ஐந்துபேர் பலி- எட்டு இலட்சத்து மூவாயிரத்து 516 பேருக்குப் பாதிப்பு

மக்களை அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை
பதிப்பு: 2018 ஒக். 07 18:28
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 08 10:37
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையில் தொடந்து நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு இலட்சத்து 37 ஆயிரத்து 940 குடும்­பங்­களைச் சேர்ந்த 8 இலட்சத்து மூவாயிரத்து 516 பேர் பாதிப்­புக்­கு உள்ளாகியுள்ளதாக இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இலங்கை நேரப்படி நேற்று சனிக்கிழமை அதிகாலை முதல் பெய்துவரும் கடும்மழையினால் மண்­ச­ரிவு மற்றும் வெள்ளம் கார­ண­மாக 6 வீடுகள் முற்­றாக சேத­ம­டைந்­துள்­ள­துடன் ஆயிரத்து 46 வீடுகள் பகு­தி­ய­ளவில் சேத­ம­டைந்­துள்­ள­தாக இலங்கை இடர் முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது.
 
இந்த சீரற்ற கால­நிலை அடுத்த சில தினங்­க­ளுக்கும் தொடரும் என்­பதால் மலைப்­பாங்­கான மற்றும் சரி­வுகள் ஏற்­படும் அறி­கு­றிகள் தென்­படும் பகு­தி­களில் வாழும் மக்களை தொடர்ந்தும் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

மழைவீழ்ச்சி தொடர்ந்து அதிகரிப்பதனால் இலங்கையின் பல பகுதிகளிலும் நீர்த்­தேக்­கங்­க­ளிலும் நதி­க­ளிலும் நீரின் அளவு அதி­க­ரித்து வரு­கின்­றது. இவ்­வாறு நீர் மட்டம் அதி­க­ரித்­தாலும் வெள்ளம் ஏற்­படும் அபாயம் இது­வ­ரையில் ஏற்­ப­ட­வில்லை.

இந்த கால­நி­லை­யினால் தெற்கு அதி­வேக நெடுஞ்­சாலை மற்றும் கட்­டு­நா­யக்கா அதி­வேக நெடுஞ்­சா­லை­க­ளிலும் பல விபத்து சம்­ப­வங்கள் பதி­வா­கி­ய­தோடு அதி­வேக நெடுஞ்­சா­லை­களில் பய­ணிக்கும் சார­திகள் அவ­தா­னத்­துடன் இக்குமாறும், மணிக்கு 60 கிலோ­மீற்றர் வேகத்தில் வாக­னங்­களைச் செலுத்­து­மாறும் அதி­வேக நெடுஞ்­சா­லைகள் பரா­ம­ரிப்பு மற்றும் திட்­ட­மிடல் பணிப்­பாளர் எஸ்.ஓப்­ப­நா­யக்க அறி­வு­றுத்­தி­யுள்ளார்.

இதே­வேளை, இலங்கையின் பாகங்­களில் நேற்று சனிக்கிழமை பெய்த கடும் மழை­யினால் கொழும்பு உள்­ளிட்ட பல நக­ரங்­களின் புற வீதிகள் நீரில் மூழ்­கி­யுள்­ள­தாக இலங்கை இடர் முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தின் பணிப்­பாளர் பிரதீப் கொடிப்­பிலி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இதுவரையில் பதுளை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் மாத்திரம் மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், பாரியளவு அனர்த்தங்கள் ஏற்படவில்லையென்றும் குறிப்பிட்டார்.