காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் குறிக்கோள் காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடி அறிதல், அவர்கள் பற்றிய விபரங்களை அறிந்துகொள்ளுதல், பரிந்துரைகளை முன்வைத்தல், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களதும் உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய உத்தரவாதங்களை வழங்குதல், நிவாரணங்களை வழங்குவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை அறிமுகம் செய்தல் என்பனவாகும்.
ஆனால் இவற்றில் எதுவுமே நடைபெறவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அதேவேளை, நாளாந்தம் பல சவால்களையும் பிரச்சினைகளையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் குடும்பங்கள் எதிர்நோக்கிவருகின்றனர்.
இந்த நிலையில் மைத்திரி - ரணில் அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் உரிய முறையில் செயற்பட வேண்டும் என்றும் இழப்பீடுகளை விட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் வடக்கு - கிழக்கு தாயகப் பிரதேசங்களில் உள்ள உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்மை மையப்படுத்தி செயற்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறியும் அலுவலகத்திலும் நம்பிக்கை இல்லை என்றும் அவா்கள் கூறியுள்ளனர்.