அதிகாரிகளின் பாராமுகம், அசமந்த போக்கு

மட்டக்களப்பு படுவான்கரை பிரதேசத்தில் யானைகளின் அட்டகாசம்

மக்கள் அச்சத்தில் வாழ்வதாக முறைப்பாடு
பதிப்பு: 2018 மே 19 15:57
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: மே 30 02:03
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள போரதீவுப்பற்று, மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு, ஏறாவூர் பற்று, வாகரை, கிரான், போன்ற பல பிரிவுகளில் வாழும் மக்கள் கட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்கி பெரும் துயரங்களை அனுபவிப்பதாக முறையிடப்பட்டுள்ளது.


 

கனியவளங்கள் இனிமையுடன் இயற்கையாகவே அமையப் பெற்ற ஓர் இயற்கைச் சாரல் வனப்பு மிக்க பிரதேசமே! மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள போரதீவுப்பற்று பிரதேசமாகும்.

வளங்கள் அதிகமாகவுள்ள படுவாங்கரைப் பிரதேசமக்கள் ஏனையவர்களைப் போல் சொகுசு வாழ்க்கை வாழவில்லை தாமும் தமது குடும்பமும் என உடனுக்கு உடன் உழைத்தே வாழ்நாளைக் கழித்து வருகின்றனர்.

வேளாமைச் செய்கைக்கு மாத்திரமின்றி நிலக்கடலை. உழுந்து, சோளன், பயறு, மரவள்ளி, குரக்கன், கௌப்பி என பல மேட்டுநிலப் பயிர் செய்கைகளுக்கும் பெயர்போன இந்தப்பிரதேசம் வரலாறு காணதா பேரழிவுகளை சந்தித்திருந்தது. என்றால் அவற்றை மறுக்கவோ, மறைக்கவோ, முடியாது.

அழிவுகள் தொடருகின்றன

இவற்றை எல்லாம் கடந்து தற்போதைய சுமூகமான சூழ்நிலையில் அப்பிரதேச மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்நிலையில் காட்டு யானைகளின் அட்டகாசங்களும் அவற்றினால் ஏற்படும் அழிவுகளும் அவர்களை விட்ட பாடில்லை. எனவே அம்மக்கள் மத்தியில் தொடரும் காட்டு யானைகளின் இன்னல்கள் குறித்து அந்தப் பிரதேசவாசிகளின் எண்ண அலைகளுடன் இக்கட்டுரை புலனாகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள மிகப் பெரிய நிலப்பரப்பான பகுதியில் அமைந்துள்ள படுவான்கரைப் பகுதியில் காட்டு யானைகளின் தொல்லைகளும் அட்டகாசங்களும் அடாவடித் தனங்ளும், நாளுக்கு நாள் அதிகரித்த வன்னமே! உள்ளன.

அதிலும் எல்லையோரக் கிராமங்களான பாலையடிவட்டை, காக்காச்சிவட்டை, நெல்லிக்காடு 35ஆம், 37ஆம், 38ஆம், 39ஆம், 40ஆம், கிராமங்கள் விவேகானந்தபுரம், திக்கோடை தும்பங்கேணி, இளைஞர் விவசாயத்திட்டம், களுமுந்தன்வெளி, புன்னக்குளம், சுரவணையடியூற்று, வெல்லாவெளி, விவேகானந்தபுரம், றாணமடு, சின்னவத்தை, தாந்தாமலை, கச்சக்கொடிச்சுவாமிமலை, நெல்லிக்காடு, புல்லுமலை, பாவக்கொடிச்சோனை, கண்டியனாறு, 8 ஆம் கட்டை, கரடியனாறு, போன்ற பல கிராமங்களிலேயே யானைகளின் அட்டகாசங்கள், அதிகரித்துக் கானப்படுகின்றன.

படுவான்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள போரதீவுப்பற்று, மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு, ஏறாவூர் பற்று, வாகரை, கிரான், போன்ற பல பிரிவுகளில் மக்கள் செறிந்து வாழ்கின்றனர் விவசாயத்தினையும், கால்நடை வளப்புக்களையும், பிரதான தொழிலாகக் கொண்டுள்ள அங்குள்ள மக்கள் வீட்டுத்தோட்டம், கைத்தொழில், கோழிவளப்பு, செங்கல்; வெட்டுதல், கூலிவேலை செய்தல், போன்ற இதரதொழில்களையும் மேற்கொன்டு வருகின்றனர்.

வருடாந்தம் ஐப்பசி தொடக்கம் மாசிமாதம் வரையான காலப்பகுதிகளில் பெரும்போக வேளாமைச் செய்கைகளையும் தோட்டங்களையும் பரந்த அளவிலும், சித்திரை தொடக்கம் அடி மாதம் காலப்பகுதிகளில் சிறுபோக வேளாண்மைச் செய்கையையும் குறைந்த அளவிலான காலபோக வேளாண்மைச் செய்கையினையும் இந்தப்பகுதி மக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு மேற்கொள்ளும் தமது ஐிவனோபாயத்திற்கு மிகநீண்டகாலமாக இருந்து காட்டு யானைகளின் அட்டகாசங்கள் அதிகரித்தே வருகின்றன என அந்தப்பிரதேச மக்கள் அங்கலாய்க்கின்றனர். இவ்விடையத்தினை அந்த மக்களின் வாயிலிருந்தே கேட்டறிவதற்காக அப்பிரதேசத்திற்கு நான் விரைந்தேன்.

பத்து தடவைகள் இடம்பெயர்வு

அப்போது 35 ஆம் கிராமத்தினைச் சேர்ந்த கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் செயலாளர் க.காந்தன்; என்பவர் இவ்வாறு கூறுகின்றார்.

நாங்கள் எமது கிராமத்திலிருந்து சுமார் 10 தடவைகளுக்கு மேல் இடம் பெயர்ந்து பற்பல இடங்களில் வழ்ந்து வந்தோம், இறுதியாக கடந்த 2007 ஆம் ஆண்டு மீழக்குடியமர்ந்துள்ளோம். கடந்த யுத்தத்தினால் எமது மக்கள் சகல உடமைகளையும் இழந்துள்ளார்கள் தற்போது காட்டு யானைகள் எம் உறவுகளின் வீடுகளை இரவும் பகலுமாக மாறிமாறி உடைத்து வருகின்றன.

இதுவரை எமது பகுதியில் 5 பேருக்கு மேல் காட்டு யானைகள் அடித்துக் கொன்றுள்ளது. சுமார் 50 இற்கு மேற்பட்ட வீடுகள் யானைகளினால் முற்றாக உடைக்கப் பட்டுள்ளன. யுத்தத்தினால் துன்பப்பட்ட நாங்கள் தற்போது காட்டு யானைகளினால் துன்பப் பட்டுக்கொண்டே இருக்கின்றோம். இந்த நிலமை தொடருமாக இருந்தால் நாங்கள் யுத்தகாலத்தில் எவ்வாறு இடம் பெயர்ந்தோமோ அது போல் தற்போது காட்டு யானைகளுக்கும் பயந்து இடம் பெயரவேண்டிய நிலமை ஏற்படும் என தனது மன ஆதங்கத்தை மிகவும் உரத்த குரலில் எடுத்தியம்பினார்.

இது இவ்வாறிருக்க காக்காச்சுவட்டடைக் கிராமத்தினைச் சேர்ந்த கிராமவாசி ஒருவர் இவ்வாறு கூறுகின்றார்.

நாங்கள் தற்போது யானைகளின் அட்டகாசத்தினால் படும் பாடுகளைப்பற்றி பிரதேச செயலாளர் பிரதேசசபை, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், வனஜீவராசிகள் திணைக்களம், அரசாங்க அதிபர், போன்ற பலருக்கும் அறிவித்தும் எமக்குரிய பலன் இதுவரை கிட்டவில்லை. நாங்கள் கோருவது யானைகள் கிராமத்திற்குள் உட்புகுரும் மையப் பகுதிகளைச் சுற்றி மின்வேலிகள் அமைத்துத் தரவேண்டும் என்பதுவே ஆகும்.

ஆனால் எமக்கு நான்கு, ஜந்து யானை வெடிகள் மாத்தரம் தரப்படுகின்றன யானைகள் வரும் போது அதனை நாங்கள் வெடிக்கவைத்தால் அந்த வெடிகளை யானைகள் ஏனோ, தானோ என்று விட்டுப்போகின்றன.

அந்த வெடிகளுக்கு இங்குள்ள யானைகள் பழக்கப்பட்டு விட்டன. நாம் எத்தனை தடவைகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மின்வேலி அமைக்க வேண்டும் என்று கூறியும் அது இதுவரை அது எமக்குக் கைகூடவில்லை எனக் கூறினார்.

இது இவ்வாறிருக்க இப்பிரதேசம் வேளாண்மைச் செய்கைக்குப் பெயர்போனது இங்குள்ளவர்கள் விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர் இந்த விவசாயிகளின் கத்தரி, வெண்டி, மரவள்ளி, தென்னை, வாழைத் தோட்டங்களையும், அழித்து வருவதோடு வேளாண்மை வயல்களையும் அழித்து நெல் மூட்டைகளையும் உண்டும், சேதப்படுத்தியும், வருகின்றன என அவரது மன ஆதங்கத்தை எம்மிடம் கொட்டிதீர்தார்.

இதுபோல் யானைத் தாக்குதலுக்குள்ளான வீட்டு உரிமையாளர் ஒருவரான பிலாலிவேம்பு கிராமத்தினைச் சேர்ந்த கந்தசாமி என்பவரைச் சந்தித்தேன்.

நாங்க மாலை ஆறு மணியானால் நித்திரை கொள்வதில்லை விடிய, விடிய கண் விழித்துக் கொண்டுதான் இருப்போம் இவ்வாறுதான ஒருநாள் நள்ளிரவு 3 மணியளவில் உறக்கதிலிருக்கும் போது எமது குடிசை வீட்டின் பின் சுவரை இடித்துக் கொண்டு யானையின் தும்பிக்கை எங்கட விட்டினுள் இருப்பதைக்; கண்டோம்.

பிள்ளைகள் அச்சமின்றி வாழ வேண்டும்

பின்னர் அரோகரா என்று கத்தினோம் கிராமத்திலுள்ள பலரும் ஓடிவந்து சத்தமிட யானை ஒருவாறு சற்று நகர்ந்து விட்டது. எங்களுக்கு சாப்பிட, குடிக்க ஒன்றும் நாங்க கேட்க வில்லை எங்கட பிள்ளைகளை அச்சமின்றி வாழ்வதற்கு யானைத் தொல்லைகளை இல்லாது ஒழித்துத் தாருங்கள் என்றுதான் கேட்கின்றோம்.

பலர் அவ்வப்போது வந்து பார்வையிட்டுச் செல்கின்றார்கள் ஆனால் இதுவரை நடந்தது ஒன்றுமில்லை இதனால் எங்கட பிள்ளைகளின் படிப்புத்தான் வீணாகின்றது நிம்மதியாக இரவில் படிக்க முடியாதுள்ளது. இவ்வாறு இந்த நிலமை நீடித்தால் எமது எதிர்காலச் சந்ததியினரை எவ்வாறு வளர்த்தெடுப்பது என்றுதான் கவலையாய் இருக்கின்றது. என்று என்னிடம் கண்ணீர் மல்க எம்மிடம் எடுத்துரைத்தார்.

காட்டுயானைகளின் தக்குதலுக்கும் அட்டகாசங்களுக்குள்ளும் தள்ளப்பட்டுள்ள படுவான்கரைப் பிரதேச மக்கள் கடந்த காலங்களில் 1957 ஆம் ஆண்டு ஏற்பட்ட பாரிய பெரிய வெள்ளம், அதனைத் தொடர்து, 1978 ஆண்டு வந்த சூறாவளி, பின் தொடர்ச்சியாகப் பீடித்த கோரயுத்தம், பின்னர் தொடரந்து வரட்சி, வெள்ள அனர்த்தம், போன்ற இவைகளனைத்திற்கும் முகம்கொடுத்து தற்போது மெல்லமெல்ல மீண்டெழுந்து வந்து கொண்டிருக்கும் நிலையில் 'மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பதுபோல' தற்போது காட்டு யானைகள் கூட்டமாகவும் தனியாகவும் கிராமங்களும், மக்களின் பயிர் பச்சைகளுக்குள்ளும், புகுந்த அப்பாவி மக்களின் உயிர்களையும், உடமைகளையும் குடியிருக்கும் வீடுகளையும் அழித்து வருவது மட்டுமல்லாமல், அவர்களது வாழ்வாதாரததிற்குத் துணை நிற்கின்ற தொழில்களையும் அழித்து வருவது என்பது மிகவும் வேதனையான விடயமே!

இதனை மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பிரதிபலிக்கும் அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் துரித கதியில் நடவடிக்கை எடுக்க வேண்டுமல்வா?

இவ்விடயம் குறித்து அப்பிரதேசத்திலுள்ள அரச கடமையில் ஈடுபடும் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிகையில்.

இப்பிரதேச மக்கள் பன்னெடுங் காலமாக சொல்லெணாத் துயரங்களை எதிர் கொண்டவர்கள், அவர்களை தொடர்ந்தும் துன்புறுத்தும் நடவடிக்கைகள் என்பதற்கு மேலாக காட்டு யானைகளின் தொல்லைகள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன.

ஆனால் இப்பிரதேசம் காட்டு யானைகள் வாழும் பிரதேசம் இல்லை மாறாக மக்கள் குடியிருக்கும் பிரதேசமாகும், யானைகள் வாழும் பிரதேசம் சரணாலயம் ஆகும், எனவே இங்குள் மக்கள் குடியிருப்புக்கள் வாழும் இடங்களிலுள்ள காட்டு யானைகளை வெடிகள் வைத்தோ அல்லது மின்சார வேலிகள் அமைத்தோ தடை செய்வது என்பதற்கு மேலாக இவைகளை பிடித்துக் கொண்டு யானைகள் வாழும் சரணாலயங்களில் விடுவதுதான் சாலச் சிறந்த விடயமாகும்.

மக்கள் வாழும் குடியிருப்புக்களுக்கள் யாட்டுயானைகள் வருவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது. இவைகளைப் பிடித்து சரணாலயங்களில் விட்டால் யானை வேலி அமைப்பது என்பது அவசியமில்லை. என அவர் தெரிவித்தார்

யானை வேலிகள் அமைக்கப்படவில்லை

இந்த விடையம் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர்; கருத்து தெரிவிக்கையில்....

மக்கள் வாழும் குடியிருப்புக்களின் அருகிலுள்ள பற்றைக் காடுகளில் தங்கியுள்ள யாட்டு யானைகளை பிடித்துக்கொண்டு சரணாலயங்களில் விடவேண்டும், யானை வேலி அமைக்கப்பட்ட இடத்திற்குள் இருக்கின்ற யானைகளை துரத்தி வேலிக்கு அப்பாலி விடுவிட வேண்டும்.

புதிதாக யானை வேலிகள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும். அடுத்து மக்கள் குடியிருக்கும் பகுதியில் இருக்கின்ற காட்டுப் பகுதியினுள் தொடர்ந்து காட்டு யானைகள் தங்கி நிற்கின்றன. அக்காடுகளை துப்பரவு செய்து அங்குள்ள யானைகள் வெளியேற்ற வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தினுள் கடந்த 3 வருடத்தினுள் காட்டு யானைகளினால் தாக்குதல்களினால் 375 இற்கு மேற்பட்ட வீடுகள் சேதமாக்கப் பட்டுள்ளன. 22 மேற்பட்டோர் யானைகளினால் காயமடைந்துள்ளனர், 16 மேற்பட்டோர் இறந்துள்ளார்கள்,.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரையில் அமைந்துள்ள போரதீவுப்பற்று, பட்டிப்பளை, வவுணதீவு, ஆகிய 3 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சேர்த்து, 60 இற்கு மேற்பட்ட வீடுகள் சேதமாக்கப்பட்டும் 30 வருடங்கள் பழமைவாய்ந்த பயன் தரும் தென்னை மரங்களை அழித்துள்ளன. மேட்டு நிலப் பயிர் செய்கையும் வேளாண்மைச் செகையினையும் அழிந்துள்ளன.

தற்போது இப்பகுதியில் காட்டுயானைகள் மக்களின் விடுகளுக்குள் புகுந்து உணவுகளை உண்ணக்கூடிய அளவிற்கு வந்துள்ளன. மட்டக்களப்பு மாட்டத்தில் காட்டு யானைகளின் நடமாட்டங்கள் அதிகரித்துள்ளன. எனவே மக்களின் அவசரகால நிலமையினைக் கருத்தில் சம்மந்தப்பட்வர்கள் துரித கதியில் நடவடிக்கை எடுக்க வேணடும் என அவர் தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க வனஜீவராசிகள் அமைச்சின் தகவலுக்கமைய

1900 ஆண்டுகளில் நாட்டில் 88 சதவீதம் காடுகள் இருந்தன ஆனால் தற்போது 20 மில்லியனுக்கு மேலாக மக்களும் 18 சத வீதத்திற்கும் குறைவான காடுகளுமே உள்ளன.
தற்போது நாட்டில் மக்கள் குடியிருக்கவும் பயிர் செய்கைகளுக்கும் தொழிற் பேட்டைகளுக்குமாக பல்வேறு தேவைகளை மையப்படுத்தி காடுகள் அழிக்கப்பட்டு வருக்கின்றன.

இதனால் காடுகளிலுள்ள யானைகள் உணவை தேடி கிராமங்களுக்குள் செல்கின்றன இருந்த போதிலும் இலங்கையில் மின்சார வேலிகள் அமைக்கும் செயற்பாடு நடைமுறையிலுள்ளன. ஆனாலும் இத்திட்டதினால் யானைகளின் தொல்லைகளைக் குறைக்கலாமே தவிர குற்றுமுழுதாக ஈடு செய்ய முடியாது எனத் தெரியவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியிலுள்ள மக்களிடமிருந்து காட்டு யானைகளின் அட்டகாசங்கள் தொடர்பில் தொடர்ந்து முறைபாடுகள் கிடைக்கின்றன. எமக்கு ஆளணிப் பற்றாக்குறை நிலவி வருகின்றது. இதற்காக வேண்டி தற்போது எமது திணைக்களத்தினால் வன விவி மித்துரு எனும் திட்டத்தை அமுல் படுத்தியுள்ளோம்.

இதன்மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 8 பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து அவ்வவ் பிதேச செயலாளர்களால் தெரிவு செய்யப்பட்ட மொத்தம் 300 இளைஞர்கள் 50 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு யானைகள் கிராமத்தினுள் ஊடுருவுவதை எவ்வாறு தடுத்தல், யானைகளைக் கட்டுப்படுத்தல், யானை வெடிகளைக் கையாளுதல், போன்ற போன்ற பயிற்சிகளை வழங்கி வருகின்றோம். என மட்டக்களப்பு மாவட்ட வன ஜீவராசிகள் சுற்றுவட்ட உத்தியோகஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது எமக்கு மட்டக்களப்பு, வெல்லாவெளி, மற்றும் கிரான் ஆகிய இடங்களில்தான் காரியாலயங்கள் உள்ளன. இக்காரியாலயங்களை மேலும் பல இடங்களுக்கு விஸ்த்தரிப்பதற்கு எமது மேலதிகாரிகளிடம் கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம்.

நிவாரணங்கள் இல்லை

தற்போது 150 கிலோ மீற்றர் யானைப் பாதுகாப்பு வேலி அமைக்கப் பட்டுள்ன. மேலும் 100 கிலோ மீற்றர் யானைப் பாதுகாப்பு வேலி அமைப்பதற்குரிய திட்ட முன் மொழிவுகள் பிரதேச செயலாளர்களிடமிருந்து எமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன. இவற்றுக்கு மேலாக காட்டு யானைகளினால் பாத்திக்கப் பட்டவர்களுக்கான நிவாரணங்களை நாம் எமது திணைக்களத்தினால் வழங்கி வருகின்றோம். என அவர் மேலும் தெரிவித்தார்.

எது எப்படி இருப்பினும் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்தில் காட்டு யானைகள் மக்களின் வீடுகளையும், பயிர்களையும் அழிப்பதை இனிமேலும் கட்டுப்படுத்த வில்லையாயின் அப்பகுதியிலுள்ள காட்டுயானைகளின் அட்டகாசத்திற்குட்படும் மக்கள் தமது சொத்துக்கள் அனைத்தினையும் விட்டு, விட்டு கடந்த யுத்த காலத்தில் இடம்பெயர்ந்தது போல் மேலும், இடம்பெயர் வேண்டிய நிலமை ஏற்படும் எனவும் அப்பகுதி மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

எனவே சம்மந்தப்பட்ட, அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், அப்பகுதி மக்களின் நிலமையினைக் கருத்தில் கொண்டு உரிய வேலைத் திட்டத்தினை காலநேரம் பாராமல் மிகவிரையில் அமுல்ப்படுத்த வேண்டும் என்பதையே அப்பகுதி மக்கள் எதிர் பார்த்திருக்கின்றனர்.