(யாழ்ப்பாணம், ஈழம் )
தமிழர் தாயகத்தில் இடம்பெறும் வாள்வெட்டு உள்ளிட்ட வன்முறைகள், போதைப் பொருள் பாவனை போன்ற குற்றச்செயல்களுக்கு இலங்கைப் படையினர் காரணம் என குற்றம் சுமத்தப்பட்டு வரும் நிலையில், இலங்கை அரசாங்கத்தின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் றஞ்சித் மத்தும பண்டார, பிரதி அமைச்சர் நளின் பண்டார, பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளனர். ஆனால் இலங்கைப் படையினர் மீதான குற்றச்சாட்டுக்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளவேயில்லை. இந்த நிலையில் யாழ் கொடிகாமத்தில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று, இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு இடம்பெற்றுள்ளது. கொடிகாமத்தில் உள்ள இலங்கைப் பொலிஸாருக்கு அறிவித்தபோதும் இன்று காலை ஒன்பது மணி வரை பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வரவேயில்லையென உறவினர்கள் கூறுகின்றனர்.