(சென்னை, தமிழ்நாடு)
திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவரும், தமிழ்நாட்டிற்கு ஐந்து முறை முதலமைச்சராக இருந்தவருமான `கலைஞர்` என்றழைக்கப்படும் முத்துவேல் கருணாநிதி தனது 94ஆம் வயதில் மரணமடைந்ததைத் தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்டார். அறிஞர் அண்ணா முதலமைச்சராக பதவி வகித்து இறந்தபோது (1969), அவரது உடலின் மேல் போர்த்தப்பட்டிருந்த இந்தியத் தேசியக் கொடியை அகற்றி, அவருக்கு கட்சிக் கொடியை கருணாநிதி போர்த்தியிருந்தார். ஆனால், இன்று கருணாநிதியின் உடல் மீது இருந்த திமுக கொடியின் மேல் இந்தியத் தேசியக் கொடி போர்த்தப்பட்டமை வரலாற்று முரண் என தமிழக ஊடகவியலாளர் ஒருவர் கூர்மை செய்தித்தளத்திற்கு தெரிவித்திருந்தார்.