(முல்லைத்தீவு, ஈழம்)
தமிழர் தாயகமான முல்லைத்தீவு நாயாறுப் பிரதேசத்தில் நேற்றுத் திங்கட்கிழமை இரவு 11.30க்கு தமிழர்களின் எட்டு மீன் வாடிகள், மூன்று படகுகள், இரண்டு இயந்திரம், 27 வலைகள் ஆகியன தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. தென்பகுதி சிங்கள மீனவர்கள் முல்லைத்தீவுக் கடலில் அனுமதியின்றியும் சட்டவிரோதமாகவும் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு முல்லைத்தீவு மீனவர்கள் கடந்த சில வாரங்ளாக எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் கடந்த 12 ஆம் திகதி இலங்கை அமைச்சர்கள் உயர் அதிகாரிகள் குழு ஒன்று முல்லைத்தீவுக்குச் சென்று மீனவர்களுடன் கலந்துரையாடி பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு தமிழ் மீனவாக்ளின் வளங்கள் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.