நிரல்
செப். 13 22:47

அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண மீதான விசாரணையைத் தடுக்க மைத்திரி முயற்சி- அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதம்

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கை முப்படைகளின் பிரதானியும் இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண இலங்கைக் குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்குச் செல்வதை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பவில்லையென அமைச்சரவைத் தகவல்கள் கூறுகின்றன. மாணவர்கள் உட்பட 11 தமிழ் இளைஞர்கள் கொழும்பில் வெள்ளைவானில் கடத்தப்பட்டுப் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை முன்னாள் கடற்படை அதிகாரியான நேவி சம்பத் பிரதான எதிரியாவார். அவர் மலேசியாவுக்குத் தப்பிச் செல்வதற்கு ஐந்து இலட்சம் ரூபாய்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ணவை இலங்கைக் குற்றப்புலனாய்வுப் பிரிவு சென்ற பத்தாம் திகதி திங்கட்கிழமை விசாரணைக்கு அழைத்திருந்தது.
செப். 13 11:42

ஏறாவூர்ப்பற்று புன்னக்குடா பிரதேசத்தில் ஆட்லறி பயிற்சி முகாம் அமைக்க இலங்கை இராணுவம் முயற்சி

(மட்டக்களப்பு, ஈழம்) மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவு புன்னக்குடா பகுதியில் உள்ள எல்.ஆர்.சி காணியில் இலங்கை இராணுவத்தின் ஆட்லறி பயிற்சி முகாமை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இலங்கை இராணுவம் 2007 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தை ஆக்கிரமித்திருந்தது. அதன் பின்னர் அபகரிக்கப்பட்ட பொதுமக்களின் குடியிருப்புக் காணிகளில் சுமார் 15 ஏக்கர் காணிகள் மீண்டும் கையளிக்கப்பட்டன. வாழைச்சேனை மட்டக்களப்பு பிரதான வீதியில் 1990ஆம் ஆண்டு முறக்கொட்டாஞ்சேனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை காணியின் பத்து ஏக்கரில் இலங்கை இராணுவத்தின் எட்டாவது ரெஜிமெண்ட் தலைமைக் காரியாலயமாக செயற்பட்டு வந்தது.
செப். 13 10:52

பூநகரி கரியாலை நாகபடுவான் கணேஸ் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து இலங்கை இராணுவச் சிப்பாய்கள் இருவர் அட்டகாசம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) வடமாகாணம் கிளிநொச்சி பூநகரி கரியாலை நாகபடுவான் கணேஸ் மக்கள் குடியிருப்புக்குள் வந்து குற்றச் செயலில் ஈடுபட முற்பட்ட இலங்கை இராணுச் சிப்பாய்கள் இருவரை மக்கள் மடக்கிப்பிடித்ததுள்ளனர். இன்று வியாழக்கிழமை அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலங்கை இராணுவச் சிப்பாய்கள் ஏற்கனவே இந்தக் குடியிருப்புக்குள் புகுந்து பாலியல் துஸ்பிரயோகம் உள்ளிட்ட பல குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக மக்கள் பல தடவை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். ஆனால் உரிய நடவடிக்கை எதுவுமே எடுக்கப்படவில்லை. இலங்கை இராணுவச் சிப்பாய்கள் வீடுகளுக்குள் புகுந்து மேற்கொண்டு வரும் தொந்தரவுகள் குறித்து ஆதாரத்துடன் முறையிட வேண்டும் என அதிகாரிகள் கூறியிருந்தனர். இலங்கைப் பொலிஸாரும் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.
செப். 12 23:22

நந்திக்கடலில் பெருமளவு மீன்கள் உயிரிழந்து கரையொதுங்கியுள்ளன- மீனவர்கள் கவலை, தொழில் பாதிப்பு

(முல்லைத்தீவு, ஈழம்) தமிழர் தாயகமான வடக்கு மாகாணத்தில் அதிக கடல்வளத்தைக் கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக்கடல் பகுதியில் அதிகளவான மீன்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் சிறுகடல் பகுதியான நந்திக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பம் மற்றும் அதிக உப்புச்செறிவு காரணமாகவே மீன்கள் உயிரிழந்துள்ளன. இதனால், கடற்கரையோரத்தில் துர்நாற்றம் வீசுவதுடன், மீனவர்களின் மீன்பிடித் தொழிலும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்டுத் தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் மீது, சிங்கள மீனவர்கள் தாக்குதல் நடாத்தி, அவர்களது வளங்களை சூறையாடி, அவற்றை அழித்தொழித்தும் வருகின்றனர்.
செப். 12 22:00

தாழ்வுபாடு கிராமத்தின் கடற்கரையோர வீதியை வழி மறித்து இலங்கைக் கடற்படையினர் முகாம் அமைத்துள்ளனர்

(மன்னார், ஈழம்) வடமாகாணம் மன்னார் மாவட்டம் தாழ்வுபாடு மீனவ கிராமத்தின் கடற்கரையோரமாகவுள்ள வீதியை மறித்து இலங்கை கடற்படையினர் முகாமிட்டுள்ளனர். இதனால் முகாமை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு தாழ்வுபாடு கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மன்னார் தாழ்வுபாடு மீனவ கிராமத்திலிருந்து ஓலைத்தொடுவாய், பேசாலை, நடுக்குடா ஆகிய பகுதிகளின் கடற்கரையை அண்டி, முப்பது வருடங்களாக பாதை ஒன்றும் உபயோகத்தில் உள்ளது. மேலும் தாழ்வுபாட்டில் இருந்து ஓலைத்தொடுவாய் வரை நன்கு செப்பனிடப்பட்டு பெருமளவு பொதுமக்களும் நூற்றுக்கணக்கான மீனவர்களும் தினமும் பயன்படுத்தும் இவ்வீதி ஓலைத்தொடுவாயிலிருந்து தலைமன்னார் கடற்கரை வரை மணல் வீதியாக உள்ளது. அத்துடன் குறித்த பாதை தலைமன்னார் கிராமம் மற்றும் தலைமன்னார் பியர் வரை நீண்டும் செல்கின்றது
செப். 12 15:18

கல்லாறுப் பாலத்திற்கு அருகாகவுள்ள தேக்கம் நீர்த்தேக்கப் பகுதியை புனரமைப்புச் செய்யுமாறு கோரிக்கை

(வவுனியா, ஈழம் ) வட மாகாணம் வவுனியா மாவட்டத்தில் மன்னார் மதவாச்சி பிரதான வீதிக்கு அன்மித்தாகக் காணப்படும் கல்லாறு பாலம் 1875ஆம் ஆண்டு பழமை வாய்ந்ததாகும். இங்கு காணப்படும் தேக்கம் என்ற பிரதான பகுதி கருங்கற்களினால் அமைக்கப்பட்ட பெரிய நீர்த்தேக்கமாகும். தேக்கம் என அழைக்கப்படும் இந்தப் பிரதான பகுதியில் உள்ள இந்நீர்த்தேக்கத்திற்கு நீராட, தற்போது பெருமளவு மக்கள் வந்து செல்கின்றனர். கல்லாறு பாலத்தைச் சூழவுள்ள இயற்கை அழகுள்ள இந்த பிரதேசத்தில் அதிகளவு வளங்களும் உள்ளன. விவசாயச் செய்கைக்கும் இதனை பயன்படுத்த முடியும். ஆகவே செட்டிகுளம் பிரதேச சபைக்கு வருமானம் தரக்கூடிய வகையில் பாலத்திற்கு அன்மித்த தேக்கம், நீர்த்தேக்கப் பகுதியை புனரமைக்க வேண்டும் என பிரதேச சபை உறுப்பினர் ஜேசுதாஸ் டெல்சன் பிரேரணையை சமர்ப்பித்துள்ளார்.
செப். 11 22:13

பள்ளிமுனை மீனவர்களின் காணியில் இருந்து வெளியேற இலங்கைக் கடற்படை மறுப்பு- நீதிமன்றத்தில் விசாரணை

(மன்னார், ஈழம்) வடமாகாணம் மன்னார் பள்ளிமுனை மீனவர்களின் காணிகளை ஆக்கிரமித்துள்ள இலங்கைக் கடற்படையினருக்கு எதிரான வழக்கு விசாரணையின்போது மனுதாரரான பள்ளிமுனை தமிழ் மீனவர்களுடன் எவ்வித இணக்கப்பாட்டிற்கும் வரமுடியாதென இலங்கைக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மன்னார் பள்ளிமுனை மீனவர்களின் இருப்பிடங்களையும் அவர்களுக்கு செந்தமான காணிகளையும் இலங்கை கடற்படையினர் ஆக்கிரமித்துள்ள நிலையில், தமது காணிகளை விடுவித்து தருமாறு வலியுறுத்தி கடற்படையினருக்கு எதிராக மன்னார் மாவட்ட நீதிமன்றில் மன்னார் பள்ளிமுனை தமிழ் மீனவர்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை மன்னார் மாவட்ட நீதிபதி சரவணராஜா முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
செப். 11 18:03

மட்டக்களப்பு வெல்லாவெளி சின்னவத்தை கண்டத்தில் தமிழர்களின் காணிகள் பௌத்த குருமாரினால் அபகரிப்பு

(மட்டக்களப்பு, ஈழம்) மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாகரையின் வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சின்னவத்தை 25 எம்.சீ 28ஆம் கண்டத்தில் இருக்கும் தமிழர்களது காணிகளை பௌத்த பிக்குமார் அபகரிப்பதாக முறையிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகரில் இருக்கும் அம்பேப்பிட்டிய சுமணரெத்தின தேரரும் சின்னவத்தையில் இருக்கும் பௌத்த பிக்குவும் சேர்ந்து தமிழ் அரச அதிகாரிகளை அச்சுறுத்தி காணியை அபகரித்துச் சிங்கள மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக காணி உரிமையாளர் நாகமுத்து லக்சுமணன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். காணிகள் அபகரிக்கப்படுவதை நிறுத்த முடியாதுள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.
செப். 11 15:10

மன்னார் வைத்தியசாலையில் கர்ப்பிணித்தாய்மார்களின் அவல நிலை- தாக்குதல் நடத்தியவர்கள் பிணையில் விடுதலை

(மன்னார், ஈழம்) வடமாகாணம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்து கடந்த மூன்று தினங்களில் 22 கர்ப்பிணித்தாய்மார்கள் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் மீது கடந்த வியாழக்கிழமை காலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவத்தைக் கண்டித்து வைத்தியர்கள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களை இலங்கைப் பொலிஸார் கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். எனினும் குறித்த இரு சந்தேக நபர்களும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செப். 11 10:42

இலங்கையின் அரசியலமைப்பை மீறிய சுப்பிரமணியன் சுவாமியின் பேச்சு- மைத்திரி- ரணிலின் எதிர்வினை என்ன?

(மன்னார், ஈழம்) இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இந்தியாவின் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி பாராட்டியுள்ளார். இலங்கையின் எதிர்கால ஜனாதிபதி எனவும் அவர் தனது ருவீட்டர் தளத்தில் கூறியுள்ளார். புதுடில்லியில் ஹிந்துஸ்த்தான் சங்கம் நடத்தும் நிகழ்வில் இந்திய- இலங்கை உறவுகள் தொடர்பாக மஹிந்த ராஜபக்ச உரையாற்றவுள்ளார். சம்பந்தனை உள்ளடக்கிய இலங்கை நாடாளுமன்றக் குழு புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்தர மோடியை நேற்றுத் திங்கட்கிழமை சந்தித்துள்ள நிலையில் மஹிந்த ராஜபக்சவும் புதுடில்லியில் தங்கியுள்ளார். ஹிந்துஸ்த்தான் சங்கம் நடத்தும் நிகழ்வில் உரையாற்றுவதற்கான அழைப்பை சுப்பிரமணியன் சுவாமி இலங்கையின் அம்பாந்தோட்டைக்குச் சென்று மஹிந்த ராஜபக்சவிடம் கையளித்திருந்தார்.