ஒக். 10 20:30
(மட்டக்களப்பு, ஈழம்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துவரும் நிலையில், கழிவுப் பொருட்களை அப்புறப்படுத்துவதற்காகச் சென்ற வாழைச்சேனை பிரதேச சபையின் சுத்திகரிப்பு ஊழியர் ஒருவர் காட்டுயானையின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். வாழைச்சேனை பிரதேச சபையில் சுத்திகரிப்பாளராக கடமையாற்றும் வாழைச்சேனை - விநாயகபுரத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான, 48 வயதுடைய கணேசன் என அழைக்கப்படும் பழனியாண்டி முனியாண்டி என்பவரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.