ஒக். 15 22:03
(மன்னார், ஈழம்)
மன்னார் மாவட்டம் திருக்கேதீஸ்வர பிரதேசத்தில் இலங்கை இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகள் சுமார் 30 வருடங்களாக கையளிக்கப்படாத நிலையில் காணிகளின் சொந்தக்காரர்களில் அநேகர் தொடர்ந்தும் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர்.
மன்னார் பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட திருக்கேதீஸ்வரம், எள்ளுப்பிட்டி, நாகதாழ்வு, பள்ளமடு, பெரியநாவற்குளம் ஆகிய பாரம்பரிய தமிழ் கிராமங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் கடந்த 1988 மற்றும் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிலவிய போர் காரணமாக தமது தாயகப் பிரதேசங்களில் இருந்து வெளியேறி மன்னார் நகரிலும் வேறு மாவட்டங்களிலும் இந்தியாவின் தமிழ்நாட்டிற்கும் இடம்பெயர்ந்தனர். இதன் காரணத்தினால் இந்தக் கிராமங்கள் இலங்கை இராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருந்தன.