கட்டுரை: நிரல்
ஜூன் 16 23:07

சென்னை மாநாடு: இலங்கையில் நடைபெற்றது உள் நாட்டுப் போர் அல்ல; இன அழிப்புக்குப் பலர் பொறுப்பு

(சென்னை, தமிழ் நாடு) தமிழ்நாடு, சென்னையில் ஜூன் 9 ஆம் நாள், அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம் என்ற அமைப்பின் பெயரில், ஈழத்தமிழர் ஆதரவு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு என்ற தலைப்போடு, ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டி பன்னாட்டு வழக்கறிஞர்கள் மாநாடு நடந்தேறியது. ஓய்வு பெற்ற நீதிபதி து. அரிபரந்தாமன் அவர்களின் தலைமையில், தமிழகம், ஈழம், மற்றும் இந்தியாவினுள் உள்ள பிற மாநிலங்கள் உட்பட சர்வதேச நாடுகளில் இருந்தும் வழக்குரைஞர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஈழத்தமிழர்களுக்கான குற்றவியல் நீதியும், ஈடுசெய் நீதியும் மறுக்கப்படக்கூடாது, இலங்கையே தன்னைத் தானே விசாரித்துக்கொள்ளும் உள்ளக விசாரணை முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் மாநாட்டு அழைப்பிதழில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 11 08:02

இலங்கை பிரதான மூலோபாய அமைவிடம் என்கிறார் சீன வங்கி முகாமையாளர்

(யாழ்ப்பாணம், ஈழம் ) சீன அரசுக்கான மூலோபாய அமைவிடமாகவும் ஏனைய வர்த்தக செயற்பாடுகளுக்கும் இலங்கையை சீனா, தனது பிரதான மையமாக மாற்றி வருவதாகவும் கூறியுள்ள கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன, 2015ஆம் ஆண்டு நல்லாட்சி என்ற பெயரில் உருவாக்கப்பட்ட மைத்திரி ரணில் அரசாங்கமே அதற்கு முக்கிய காரணம் என்றும் கூறியுள்ளார். அதேவேளை மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியிலேதான் சீன முதலீடுகளுக்கான அதிகளவு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர, கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கூறியுள்ளார்
ஜூன் 09 14:07

வானளாவிய தொடர்புக் கோபுரத்தில் வேலைக்குச் சென்ற தமிழ் மாணவன் தவறி விழுந்து பரிதாப மரணம்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் அனுமதியுடன் தீவின் தென்பகுதியை மையமாகக் கொண்டு சீனா பல்வேறு கட்டுமானங்களை நிறுவி வருவது தெரிந்ததே. இந்தவரிசையில் கொழும்பின் மருதானையில் 350 மீற்றர் உயரம் கொண்டதாக, தாமரைக் கோபுரம் (Lotus Tower) என்ற பெயரில் அமைக்கப்பட்டு வரும், தொடர்பாடல் கட்டடத்தில் இணைப்பு வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த 19 வயது தமிழ் மாணவன் தற்காலிக மின்தூக்கி ஒன்றிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த பரிதாப சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை நடந்திருக்கிறது. தமிழர் தாயகப் பகுதியான கிளிநொச்சியின் மத்திய கல்லூரியில் 2018 ஆம் ஆண்டு உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞான பாடகல்வி கற்கும் கோனேஸ்வரன் நிதர்ஷன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தவர் என்று கொழும்பில் மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜூன் 07 12:06

பாரிய கொழும்புத் துறைமுகப் பட்டினத்துக்கு விசேட சட்டமூலம், தனியான பிரதேசமாக அங்கீகரிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம் ) சீன அரசின் நிதியுதவியுடன் கொழும்பு போட் சிற்றி (Colombo Port City) என அழைக்கப்படும் பாரிய பட்டின நிர்மாணிப்புக்கு ஏற்ப, இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பில் தனியான சட்டமூலம் ஒன்று இணைக்கப்படவுள்ளது. நகல் சட்டமூலம் ஒன்றை தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை, சீன சட்ட வல்லுநர்கள் நகல் சட்ட வரைபை தயாரிக்கும் பணிகளில் ஈடுபடுவதாகவும் உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன. இந்தச் சட்டமூலத்தின் ஊடாகக் கடலில் மண்ணால் நிரப்பப்பட்ட 269 ஹெக்ரேயர் நிலம் விசேட பிரதேசமாக அங்கீகரிக்கப்பட்டு தனி நிர்வாகம் ஒன்று அங்கு இயங்கவுள்ளது. கொழும்பின் அதி பிரமாண்ட வர்த்தகப் பட்டினத்தைத் தீர்மானிக்கும் வெளிச்சக்தி எதுவோ அதுவே முழு இலங்கைத்தீவையும் கேந்திரரீதியாகக் கட்டுப்படுத்தும் என்று சீனா கருதுகிறது.
ஜூன் 05 14:44

ஒற்றையாட்சி அரசியலமைப்புச் சட்டத்தால் அரசியல் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஒற்றையாட்சிக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட இலங்கை அரசு, தமிழர் தாயகப் பகுதிகளில் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளும் சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துமாறு வலியுறுத்தி, இலங்கை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சர் ஆகியோருக்கு மகஜர் அனுப்புவதென, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வடமாகாண சபை உறுப்பினர்களும் கூட்டாக தீர்மானம் எடுத்துள்ளனர்.
ஜூன் 04 10:25

முரண்பாடுகளில் உடன்பாடு- மஹிந்த , சந்திரிக்கா. மைத்திரி ஒரே அணியில், வெளிச் சக்திகள் பின்னணியா?

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றுக்கான தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தலைமையாகக் கொண்ட, ஐக்கியதேசியக் கட்சி கூறியுள்ள அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள், இதுவரையும் முரண்பாடுகளுடன் செயற்பட்டு வந்த, முன்னாள் ஜனாதிபதிகளான, சந்திரிக்கா, மஹிந்த ராஜபக்ச, ஆகியோர் கட்சியின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆகவே மைத்திரி ரணில் அரசாங்கத்தின் நிலைமை குறித்தும், மஹிந்த ராஜபக்ச அணியின் மக்கள் செல்வாக்கின் பின்னணியில் மேற்குலகநாடுகள், இந்த அரசியலை. நகர்த்தி்ச் செல்லுகின்றதா எனவும் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் கேள்விகள் எழுந்துள்ளன
ஜூன் 02 11:19

அமெரிக்க, சீன படை அதிகாரிகள் கொழும்பில்; இலங்கைத்தீவு தொடர்பான கேந்திரப் போட்டிகள் தீவிரம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) அரசியல் மற்றும் இராணுவ செயற்பாடுகளில் எதிரும் புதிருமாக இருக்கின்ற அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் இராணுவ ஒத்துழைப்புகளை, இலங்கையின் ஒற்றையாட்சி அரசு எவ்வாறு பெற்றுக்கொள்கின்றது என கேள்வி எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கையின் முப்படைகளுடனான உறவுகளை மேலும் பலப்படுத்த அமெரிக்கா ஆர்வமாக இருப்பதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
மே 31 22:01

ஈழத்தமிழரின் கிழக்குக் கடலை அமெரிக்காவுக்குத் தாரை வார்க்கிறதா இலங்கை ஒற்றையாட்சி அரசு?

(திருகோணமலை, ஈழம்) தமிழ்பேசும் மக்களின் பாரம்பரியத் தாயகத்தின் இணைபிரியா அங்கமான திருகோணமலையின் கடல் பகுதியை மையப்படுத்திய எண்ணை மற்றும் எரிவாயு வளங்கள் பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொள்ள Schlumberger என்ற அமெரிக்க நிறுவனம் ஏற்பாடுகளைச் செய்துவருகின்றது. இதற்கான ஆரம்பகட்ட உடன்படிக்கை ஒன்றை சுலும்பேர்கர் நிறுவனம் இலங்கை பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்சுனா ரணதுங்கவுடன் புதன்கிழமை (மே 30) கைச்சாத்திட்டுள்ளதாக அந்த அமைச்சின் உயர்நிலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து கூர்மை செய்தித்தளத்திற்குக் கருத்துவெளியிட்ட தமிழ் பேசும் உயர்மட்ட அதிகாரி ஒருவர் கிழக்கின் கடலில் எண்ணெய் வள ஆய்வு மட்டுமல்ல, இராணுவ ரீதியான கடற்படை உறவையும் அமெரிக்கா பலப்படுத்தியிருக்கிறதென்பதையும் சுட்டிக்காட்டினார்.
மே 31 10:44

மஹிந்த அணியின் 16 உறுப்பினர்கள் சம்பந்தனுடன் சந்திப்பு, வெளிச்சக்திகளும் பின்னணியில்?

(யாழ்ப்பாணம், ஈழம் ) மைத்திரி, ரணில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள 16 உறுப்பினர்களும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை புதன்கிழமை சந்தித்து உரையாடியுள்ளதாக கொழும்பு வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. சந்திப்புத் தொடர்பாகக் கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலேயே தாங்கள் சம்பந்தனை சந்தித்து உரையாடியதாகக் கூறியுள்ளார். இனப்பிரச்சினை தீர்வு விவகாரத்தில், மஹிந்த ராஜபக்ச உட்பட, அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதாக சம்பந்தனும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
மே 29 07:37

தமிழக அரசாணை வெளியீடு: தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலை மூடப்படுமா?

(சென்னை, தமிழ்நாடு) தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையினை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை ஒன்றிணை வெளியிட்டுள்ளது. "மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்ற தாரக மந்திரத்தோடு செயல்பட்டு வந்த மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியிலேயே, மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக கோண்டு செயல்பட்டு வருவதனால், பொதுமக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் மதிப்பு அளித்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட முடிவெடுத்து, அதற்கான அரசாணைகளை இவ்வரசு வெளியிட்டுள்ளது," என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ஆனால் மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்களுக்கு ஆதரவு கொடுத்துவரும் செயற்பாட்டாளர்களும் துறை சார் நிபுணர்களும் இந்த அறிவித்தலின் சட்டவலு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளார்கள்.