கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
செப். 18 18:51

சியோனிசத்தை முன்னுதாரணமாக்கி இலங்கை அரசு நகரும் அபாயம்

(மட்டக்களப்பு, ஈழம்) இஸ்ரேல் நாட்டின் குடிகளில் இருபது விகிதத்துக்கு மேற்பட்டோர் யூதர் அல்லாத அரேபியர்கள். இந்த வருடம் வரை அங்கு அரேபிய மொழிக்கு இரண்டாவது உத்தியோக பூர்வ மொழி என்ற அந்தஸ்து இருந்துவந்தது. ஆனால், யூலை மாதம் கொண்டுவரப்பட்ட ‘அடிப்படைச் சட்டம்’ (Basic Law) என்ற சட்டவாக்கம் இந்த அந்தஸ்தை யாப்பு ரீதியாகக் குறைத்துள்ளது. தற்போது ஹீப்ரு (எபிரேயம்) மட்டுமே அரச மொழி. அடுத்தபடியாக, இன ரீதியான யூதக் குடியேற்றங்களைப் பரப்புதல் என்ற கோட்பாட்டை தேசியப் பெறுமானமாக்கி (national value) குறித்த சட்டவாக்கம் பெருமிதம் காண்கிறது. அரச காணிகளில் யூதக் குடியேற்றங்களுக்கு முன்னுரிமையும் தனித்துவமும் பேணப்படல் வேண்டும் என்பதே இதன் உட்கிடக்கை என்பதைக் காண்க. ஆக, இஸ்ரேல் கொண்டுவரும் இப்பரிமாணத்தின் சர்வதேச வியூகம் தான் என்ன?
செப். 14 19:22

திருகோணமலையை அமெரிக்காவுக்குத் தாரை வார்த்தது மோடி அரசு

மூன்று இந்தியக் கடற்படைப் போர்க் கலங்கள் இலங்கைக் கடற்படையுடன் திருகோணமலையில் கடந்த ஆறாம் திகதியில் இருந்து 13ம்திகதி வியாழன் வரை SLINEX-2018 என்ற இணைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. அமெரிக்காவும், ஜப்பானும் கடந்த மாத இறுதிப் பகுதியில் இதேபோன்ற இணைப் பயிற்சிகளை இலங்கைக் கடற்படையுடன் இதே திருமலையில் மேற்கொண்டிருந்ததன் இணைபிரியாத் தொடர்ச்சியே இதுவாகும். இணைப் பயிற்சிகள் வழங்குதல் மற்றும் கடற்படைக் கலங்களை அன்பளிப்புச் செய்தல் என்று அமெரிக்காவும் ஜப்பானும் இந்தியாவும் திருகோணமலையை மையப்படுத்தி இலங்கைக் கடற்படையை வலுப்படுத்துவதில் மிகுந்த முனைப்புக் காட்டிவருகின்றன.
செப். 13 22:37

அமெரிக்காவையடுத்து இந்தியாவின் மூன்று போர்க் கப்பல்கள் திருகோணமலைத் துறைமுகத்தில்- கூட்டுப் பயிற்சியும் நிறைவு

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கை நாடாளுமன்றக்குழு ஒன்று கடந்த ஒன்பதாம் திகதி இந்தியாவுக்குச் சென்றி்ந்த நிலையில் கடந்த ஏழாம் திகதி வெள்ளிக்கிழமை இந்தியாவின் மூன்று போர்க் கப்பல்கள் தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணம் திருகோணமலைத்துறைமுகத்திற்கு வருகை தந்திருந்தன. ஜப்பான் அமைச்சர் கஸுயுகி நகானே, (Kazuyuki Nakane) ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா (Itsunori Onodera) ஆகியோர் கடந்த மாத இறுதியில் அடுத்தடுத்து இலங்கைக்கு வருகை தந்திருந்த நிலையில், அமெரிக்க எண்ணெய் வள ஆய்வும் திருகோணமலைப் பிரதேசத்தை மையப்படுத்திய ஈழத் தமிழர் கடற்பரப்பில் சென்ற ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியுள்ளது. சீன நிறுவனம் ஒன்றிடம் இருந்து வாடகைக்குப் பெறப்பட்ட BGP Pioneer என்ற எண்ணெய் வள ஆய்வுக் கப்பல் ஒன்றும் வந்துள்ளது.
செப். 11 10:42

இலங்கையின் அரசியலமைப்பை மீறிய சுப்பிரமணியன் சுவாமியின் பேச்சு- மைத்திரி- ரணிலின் எதிர்வினை என்ன?

(மன்னார், ஈழம்) இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இந்தியாவின் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி பாராட்டியுள்ளார். இலங்கையின் எதிர்கால ஜனாதிபதி எனவும் அவர் தனது ருவீட்டர் தளத்தில் கூறியுள்ளார். புதுடில்லியில் ஹிந்துஸ்த்தான் சங்கம் நடத்தும் நிகழ்வில் இந்திய- இலங்கை உறவுகள் தொடர்பாக மஹிந்த ராஜபக்ச உரையாற்றவுள்ளார். சம்பந்தனை உள்ளடக்கிய இலங்கை நாடாளுமன்றக் குழு புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்தர மோடியை நேற்றுத் திங்கட்கிழமை சந்தித்துள்ள நிலையில் மஹிந்த ராஜபக்சவும் புதுடில்லியில் தங்கியுள்ளார். ஹிந்துஸ்த்தான் சங்கம் நடத்தும் நிகழ்வில் உரையாற்றுவதற்கான அழைப்பை சுப்பிரமணியன் சுவாமி இலங்கையின் அம்பாந்தோட்டைக்குச் சென்று மஹிந்த ராஜபக்சவிடம் கையளித்திருந்தார்.
ஓகஸ்ட் 31 15:26

மஹிந்தவை மையப்படுத்திய கூட்டு எதிர்க் கட்சியுடன் மைத்திரியின் சுதந்திரக் கட்சி இணைய வேண்டுமென அழைப்பு

(மட்டக்களப்பு, ஈழம்) மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலக வேண்டும், இல்லையேல் கட்சியில் இருந்து ஏற்கனவே விலகிய ஏனைய 15 உறுப்பினர்களும் மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தைக் கைப்பற்றவுள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் டிலான் பெரரே தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு டிலான் பெரேரா எச்சரிக்கையும் விடுத்துள்ளார். கட்சியின் வருடாந்த மாநாட்டுக்கு முன்னர் மைத்திரி- ரணில் அரசாங்கதில் இருந்து விலகுமாறும் மைத்திரிபால சிறிசேன அதற்கு இடமளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஓகஸ்ட் 23 15:36

திருகோணமலை உள்ளிட்ட கடற்பிரதேசங்களை ஜப்பான் அரசும் கையாளும்- அச்சுறுத்தலுக்கு இணங்கியதா இலங்கை அரசு?

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பாக ஜப்பான் எழுப்பிய பல கேள்விகளுக்கு மைத்திரி- ரணில் அரசாங்கம் விளக்கமளித்திருக்கின்றது. குறிப்பாக சீன அரசின் இராணுவ மூலோபாங்களுக்கு அம்பாந்தோட்டைத் துறைமுகம் பயன்படுத்தப்படும் என்பதில் சந்தேகமே இல்லையென ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா (Itsunori Onodera) கொழும்பில், இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகளுடனான சந்திப்பில் கூறியிருந்தார். ஆனால் இந்த சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கைப் பாதுகாப்பு அமைச்சர் ரூவான் விஜேரட்ன, இட்சுனோரி ஒனோடெரா கூறியதை மறுத்துள்ளார். அதாவது சீனாவின் எந்தவொரு இராணுவத் தேவைக்கும் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தைப் பயன்படுத்த இலங்கை அரசாங்கம் அனுமதிக்காது என உறுதியளித்துள்ளார்.
ஜூலை 23 13:26

இந்தியத் துணை கண்டத்தில் சிறந்த மாநில அரசுகளின் பட்டியல் வெளியீடு- தமிழ்நாடு, கேரளா சிறப்பான ஆட்சியாம்

(சென்னை, தமிழ்நாடு) இந்தியாவின் கருநாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் இயங்கும் பொது விவகார மையம் (Public Affairs Centre) வெளியிட்ட 2018-பொதுவிவகார குறியீடு (Public Affairs Index) முடிவுகளின் படி, தென்னிந்திய மாநில அரசுகளான கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா, கருநாடகம் சிறந்த ஆட்சி முறைகளை கொண்டவைகள் எனவும் மத்திய பிரதேசம், ஜார்காந்த், பீகார் ஆகிய வட இந்திய மாநிலங்களின் நிர்வாகங்களுக்கு இறுதி புள்ளிகளே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1994ஆம் ஆண்டு, இந்திய துணைக்கண்டத்தின் பொருளாதர நிபுணர்களின் ஒருவரான சாமுவேல் பவுல் என்பரால், இந்திய துணைக்கண்ட மாநில அரசுகளின் ஆட்சி முறையினை கண்காணிக்க உருவாக்கப்பட்ட அமைப்புதான், பொது விவகார மையம் (Public Affairs Centre).
ஜூலை 21 15:30

ஆதாரங்கள் இருந்தும் விசாரனைகளை மூடிமறைக்க இலங்கைப் பொலிஸார் முயற்சி? தமிழக் கட்சிகள் மௌனம்

(மட்டக்களப்பு, ஈழம்) தமிழர் தாயகமான வடமாகாணம் மன்னார் நகரத்தின் நுழைவாசலில் போர்க்காலத்திற்குரியது என சந்தேகிக்கப்படும் மனிதப் புதைகுழியில் இருந்து மூன்று சிறுவர்களின் மண்டையோடுகள் பாற்பற்களுடன் மீட்கப்பட்டுள்ளன. இந்த மூன்று சிறுவர்களும் 12 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கலாம் என அகழ்வுப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் கூறுகின்றனர். 37 ஆவது நாட்களாக இடம்பெற்று வரும் அகழ்வுப் பணியின்போது சுமார் 40 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. புதைகுழியில் காணப்பட்ட எலும்புக்கூடுகள் ஒழுங்கற்ற முறையில் இருந்ததாகவும் ஆகவே சடலங்கள் முறைப்படி அடக்கம் செய்யப்படவில்லை எனவும் சட்ட வைத்திய நிபுணர் டபில்யூ. ஆர்.ஏ.எஸ். ராஜபக்ஷ, கூறுகின்றார். களனி பல்கலைக்கழகப் பேராசிரியர் ராஜ் சோமதேவாவும் அவ்வாறு தெரிவிக்கின்றார்.
ஜூலை 18 15:51

இலங்கைப் படையின் முன்னாள் உயரதிகாரி சரத் வீரசேகர கொலை மிரட்டல்- சிவில் சமூக அமைப்புகள்

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிப்படுவதை முற்றாகவே நிரகரிக்கும் வகையில், 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், இலங்கை முப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதற்கேற்ற முறையில் மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் செயற்பாடுகளும் அமைந்துள்ளன. போருக்கு முன்னரான காலத்தில் தமிழர் தாயகத்தில் வன்முறைகள், போதைப்பொருள் பாவனைகள் இருந்ததில்லையென விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் கூறிய பின்னர், கொழும்பு அரசியலில் கொந்தளிப்பு ஏற்பட்டிருந்தது. விஜயகலா சிங்களக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவருடைய உரையில் சொல்லப்பட்ட விடங்கள் உண்மையானவை என முதலமைச்சர் விக்னேஸ்வரன் நியாயப்படுத்தினார். இதனால் இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சென்ற 17 ஆம் திகதி அவரை விசாரணைக்கும் உட்படுத்தியிருந்தனர்.
ஜூலை 09 10:39

ஜெனீ்வாவை திருப்திப்படுத்தி இலங்கைப் படையினரைக் காப்பாற்ற முயற்சி- உறவினர்கள் குற்றச்சாட்டு

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கை ஒற்றையாட்சி அரசின் கீழ் கொழும்பை மையப்படுத்தி செயற்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விபரங்களை அறியும் அலுவலகம், ஜெனீவா மனித உரிமைச் சபையின் அழுத்தங்களைக் குறைக்கும் நோக்கில் செயற்படுவதாக இடதுசாரி முன்னணியின் காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறியும் செயற்பாட்டாளர் சுந்தரம் மகேந்திரன் தெரிவித்துள்ளார். போரின் போதும், போரின் பின்னரான சூழலிலும் இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள், யுவதிகள் பற்றிய தகவல்களை பெறுவதை விட, இலங்கைப் படையினரைக் காப்பாற்றும் முயற்சிகளில் இந்த அலுவலகம் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.