தமிழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

மே 18 அழுவதற்கான நாள் அல்ல, எழுவதற்கான நாள்!
பதிப்பு: 2018 மே 18 14:26
புதுப்பிப்பு: மே 27 14:28
முள்ளிவாய்க்கால் நினைவு தொடர்பாக தமிழ் நாட்டு இளையோரின் பிரதிபலிப்புகளில் ஒன்று
முள்ளிவாய்க்கால் நினைவு தொடர்பாக தமிழ் நாட்டு இளையோரின் பிரதிபலிப்புகளில் ஒன்று
- தமிழகத்தில் ஓங்கி ஒலிக்கும் குரல்
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழக இளைஞர்கள் மத்தியில், முள்ளிவாய்க்கால் நினைவு நாளை அழுவதற்கான நாளாக கருதாமல், தமிழினம் மீண்டு எழுவதற்கான எழுச்சி நாளாக நினைவு கூர வேண்டும் என்ற கருத்து பரவி வருகிறது. கீச்சகம் (Twitter) வழியே தொடங்கியதாக அறியப்படும் கருத்துப்படம், முகநூல் (Facebook), பகிரி (Whatsapp) வழியாக அரசியல், சமூக தளங்களில் இயங்கும் இளைஞர் மத்தியில் பரவி வருகிறது.


 

உலகமெங்கும் உள்ள தமிழர்கள், முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு வருடமும், மே 18 ஆம் நாளை பல்வேறு நிகழ்ச்சிகளை, மாநாடுகள், ஒருங்கிணைப்புகள், அடையாளப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த ஆண்டு, தமிழக இளைஞர் மத்தியில், முள்ளிவாய்க்கால் நினைவு நாளை அழுவதற்கான நாளாக கருதாமல், தமிழினம் மீண்டு எழுவதற்கான எழுச்சி நாளாக நினைவு கூர வேண்டும் என்ற கருத்து பரவி வருகிறது.

இதேபோன்று, நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இன்றைய நாள் (மே 18) அறிக்கையில், ”இனப்படுகொலை நடந்து இன்னும் 10 ஆண்டுகள்கூடக் கடக்காத சூழலில் இதனை வரலாற்றுத் துயரம் எனக் கருதி வெறுமனே கடந்துவிட முடியாது. மே 18ம் நாளை தமிழர்கள் வீழ்ச்சிக்குரிய நாளாக அல்லாது விடுதலையெழுச்சிக்குரிய நாளாக உணர்ந்து போராட முன்வர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

"தன்னாட்சி தமிழகம்" கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆழி செந்தில்நாதன் அவர்களை கூர்மை இணையம் தொடர்புகொண்ட பொழுது, "நினைவஞ்சலி என்பது ஒரு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி, அதே வேளை, இந்த நாளை துக்க நாளாக கருதி ஓய்ந்து போக வேண்டியதில்லை. நினைவஞ்சலி என்ற பகுதியில் எழுச்சியும் அடக்கம், அனைத்திற்கும் மேலாக, இன்றைய நாளில் நிகழ்ந்தவைகளை தமிழர்கள் அல்லாத எல்லா தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டியதும் அவசியம். அதற்கான செயல்திட்டங்களை உருவாக்க இந்த நாளில் தமிழர்கள் சிந்திக்கவும் வேண்டும்" என தெரிவித்தார்.