ஆட்சிமாற்றத்தின் பின் ஈழத்தமிழர் கைக்கொள்ளவேண்டிய நிலைப்பாடு என்ன?
2025 தேர்தல் ஆண்டில் உள்ளூராட்சித் தேர்தலையும் மாகாணசபைத் தேர்தலையும் மையப்படுத்திச் சிந்திப்பது சரியா?
பதிப்பு: 2025 ஜன. 04 20:57
புதுப்பிப்பு:
ஜன. 07 07:49
2015 ஆம் ஆண்டு வட மாகாணசபை தமிழ் இன அழிப்புக்கான சர்வதேச நீதி கோரிய தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றியது. அதைப் பெருத்த வில்லங்கமான நகர்வாக புவிசார் அரசியலில் ஈடுபட்டிருந்த சர்வதேச தரப்புகள், குறிப்பாக மேற்கு நாடுகளின் தரப்புகள் கணிப்பிட்டன. ஏனெனில், வெறும் மனித உரிமை மீறல்களாகவும், போர்க்குற்றங்களாகவும், மனிதத்துவத்துக்கெதிரான குற்றங்களாகவும் இலங்கையில் போரில் ஈடுபட்டிருந்த இரு தரப்புகளையும் குற்றங்களிற் சமப்படுத்தி தமது புவிசார் நலன்களுக்கு ஏதுவான ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தும் தமது நிகழ்ச்சிநிரலுக்கு நேர் முரணான நிலைப்பாட்டை ஈழத் தமிழர் விடுதலை அரசியலில் உயிர்த்தெழச் செய்யும் வலு அந்த வட மாகாணசபைத் தீர்மானத்துக்கு இருந்தது.
>> மேலும் வாசிக்க
ஜன. 07 08:02
(யாழ்ப்பாணம், ஈழம்)
மாற்றங்களுக்கும் ஏமாற்றங்களுக்குமிடையே நம்பிக்கை தரும் ஓர் உரையாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் ஞாயிறன்று ஆற்றிய மாமனிதர் குமார் பொன்னம்பலம் நினைவுப் பேருரை அமைந்துள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படும் நிகழ்வில் இம்முறை மக்கள் முன்னணி முன்வைத்துள்ள தமிழ் மக்கள் பேரவையின் திட்டத்தில் உள்ள குறைபாட்டையும் சுட்டிக்காட்டிய ரகுராமின் உரை பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. செல்வராஜா கஜேந்திரன் வழங்கிய நன்றியுரையில் அவற்றை வரவேற்றும் உள்ளார். இந்த வரவேற்பு உண்மையான சுயவிமர்சனங்களுக்கு இடங்கொடுக்கும் மாற்றத்திற்கான அறிகுறியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒக். 02 18:47
(மட்டக்களப்பு, ஈழம்)
'தானாடா விட்டாலும் தசையாடும்' என்பது போல் ஈழத்தமிழர் தேசத்தினர் மீண்டும் தமது உரிமைக்காக எழுச்சிபெற்று அணிதிரள்வார்கள் என்பதை ஜனாதிபதித் தேர்தலில் சங்குச் சின்னத்தின் ஊடாக நிறுவினார்கள். இருப்பினும், வடக்கு-கிழக்கில் மேலதிகமாக முப்பதினாயிரம் வாக்குகள் பா. அரியநேத்திரனின் சங்குச் சின்னத்துக்குக் கிடைத்திருந்தால் இலங்கை ஒற்றையாட்சி அரசுக்கு ஜனாதிபதியாகியுள்ள அநுர குமார திசாநாயாகாவை விட தமிழர் தாயகத்தில் சங்குச் சின்னம் முன்வைத்த கொள்கைக்குக் கூடுதலான அங்கீகாரம் இருப்பது வாக்குகள் ஊடாக உறுதிப்படுத்தப்படும் நிலை தோன்றியிருக்கும். சர்வதேசத்துக்கும் ஒரு செய்தியைக் கனதியாகச் சொல்ல முடிந்திருக்கும்.
செப். 25 18:34
(வவுனியா, ஈழம்)
'தர்மத்தின் வாழ்வுதனைச் சூதுகவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்' என்பதற்கு அமைய ஈழத்தமிழர் தேசியப் பிரச்சனைக்கான அரசியற் தீர்வு காணும் சுயநிர்ணய உரிமைப் பயணத்தில் முதற்பாதி நடந்து முடிந்து விட்டது. சூதுகவ்வலுக்கு ஐரோப்பிய காலனித்துவம், குறிப்பாகப் பிரித்தானிய காலனித்துவம், அதன் தொடர்ச்சியாக நவகாலனித்துவமாக அமெரிக்காவுக்குக் கைமாறிய இரு துருவ, ஒரு துருவ உலக வல்லாதிக்க அரசியல் மட்டும் மூல காரணமல்ல. இந்தியத் துணைக் கண்டத்தில் மேலெழுந்துள்ள பிராந்திய மேலாதிக்கமும் முக்கியமான ஒரு காரணி. ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டம் இலங்கை ஒற்றையாட்சி அரசின் இன அழிப்புப் போர் மூலம் அழிக்கப்படுவதற்கு இவை அனைத்தும் துணைபோயின.
செப். 17 09:38
(முல்லைத்தீவு, ஈழம்)
ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் யார் வெல்லப்போகிறார்கள் என்பது முக்கியமல்ல. ஈழத்தமிழர்கள் ஒரு தேசமாக எந்தக் கருத்துநிலையை முரசறைந்து வலியுறுத்துகிறார்கள் என்பது தென்னிலங்கைக்கும் உலக மட்டத்துக்கும் அவசியமானது. டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான், கருணா, வியாழேந்திரன் என்று சலுகைகளை முன்னிலைப்படுத்தும் அரசியல் வியாதி ஒரு புறமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒற்றுமையைச் சீர்குலைத்து சுமந்திரன் முன்னெடுத்த சந்தர்ப்பவாத அரசியல் நோய் மறுபுறமுமாகக் காணப்பட்ட இருதலைக் கொள்ளி நிலையை விட, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்மறையான ஜனாதிபதித் தேர்தல் புறக்கணிப்பு என்பதற்கும் பொதுச்சபையின் பொதுவேட்பாளர் என்ற நிலைப்பாட்டுக்கும் இடையான புதிய இருதலைக் கொள்ளி நிலை உருவாகியுள்ளது.
ஓகஸ்ட் 10 14:28
(கிளிநொச்சி, ஈழம்)
ஜனாதிபதி வேட்பாளராக தமிழர் தரப்பினர் சிலரிடம் ரணில் கையளித்த கையொப்பம் எதுவுமற்ற இரண்டுபக்க ஏழு அம்ச ஆவணம் சில வட்டாரங்களுக்குள் கசிந்துள்ளது. ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையும் தனித்துவமான இறைமையையும் முழுமையாகப் புறக்கணித்து அவர்கள் எந்த ஒரு வகையிலும் தமது அரசியல் தலைவிதியைத் தாமே நிர்ணயிக்க இயலாதவாறு ஒற்றையாட்சிக்குள் முடக்கப்படுவதற்கு இடமளித்த இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் தொடர்ச்சிதான் உப்புச்சப்பு எதுவுமற்ற பதின்மூன்றாம் திருத்தம். அதைக்கூட முழுமையாகச் செயற்படுத்த இடமளிக்காமல் இதுவரை முடக்கியுள்ள இலங்கை ஒற்றையாட்சியில் மாறிமாறி அரசபீடம் ஏறும் ஆட்சியாளர்கள் தமிழர் வாக்குகளைப் பெறுவதற்காகப் பிச்சாபாத்திரம் ஏந்தும் போது மட்டும் அதை அமுலாக்குவது போலச் சில வாக்குறுதிகளைத் தருவது வழக்கம்.
ஜூலை 01 13:50
(முல்லைத்தீவு)
ஈழத்தமிழர்களுக்கென்று தனியாக அடையாளப்படுத்தப்பட்ட மரபுவழித்தாயக உரிமையை அவர்கள் தொடர்ச்சியாகக் கோரி வந்துள்ளார்கள். இது ஈழத்தமிழர் தேசியத்துவத்தின் முதலாவது அச்சாணி நிலைப்பாடு. ஒரு தனித்துவமான தேசிய இனமாகத் தமது அரசியல் வேணவாவை அவர்கள் முன்வைத்துப் போராடி வந்துள்ளார்கள் என்பது இரண்டாது அச்சாணி நிலைப்பாடு. மறுக்கப்படவொண்ணாத் தன்னாட்சியுரிமையின் அடிப்படையைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளார்கள் என்பது மூன்றாவது அச்சாணி அடிப்படை. இந்த மூன்று தூண்களுக்கும் அடுத்தபடியாக இரண்டு தூண்களாக மொத்தம் ஐந்து தூண்கள் அடிப்படையானவை. இந்த ஐந்து தூண்களையும் நினைவுபடுத்தி, தமிழ்த் தேசியப் பேரவை முயற்சி எதுவித கோப தாபங்களுக்கும் அப்பாற்பட்டு அணுகப்படவேண்டும்.
மே 29 16:20
(வவுனியா, ஈழம்)
இலங்கைத் தீவில் ஈழத்தமிழர் தேசத்தின் தன்னாட்சியுரிமையுடனான இறைமைக் கோட்பாட்டைச் சிதைத்து உள்ளக விவகாரமாக மாற்றிவிடவேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்கள் ஒரு புறமும் தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்களுடன் இரகசிய ஒப்பந்தங்களை ஒளித்து மேற்கொள்வதில் கைதேர்ந்த தமிழர்களின் தேசிய ஏமாற்றுக் கட்சிகள் மறுபுறமுமாக இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தெரிவில் ஈழத்தமிழர்களின் பொதுவேட்பாளர் முன்வைக்கவேண்டிய
கருத்தியலை குட்டிச் சுவராக்கும் சிதைப்பு நடவடிக்கைகளைத் திரைமறைவில் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். இந்தச் சிதைப்பைத் தாண்டிய நிலையில் பொதுவேட்பாளர் எனும் கருத்தியல் வெற்றிபெறவேண்டுமானால் நடக்கவேண்டியது என்ன என்ற கேள்விக்குத் துரிதமாக
தெளிவான தெளிவுபடுத்தல் அவசியமாகிறது.
மே 18 07:20
(முல்லைத்தீவு, ஈழம்)
இலங்கை ஒற்றையாட்சி அரசின் இன அழிப்பு தொடர்பான விவகாரங்களை ஐக்கிய நாடுகள் சபை உரிய முறையில் முன்னெடுக்கத் தவறியுள்ளதாக வடக்குக் கிழக்குக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கலமார்டிடம் (Agnes Callamard) தெரிவித்திருக்கின்றனர். மே 18, 2009 இல் போர் இல்லாதொழிக்கப்பட்ட நாளில் இருந்து, தமிழ் மக்களுக்கு நீதி மறுக்கப்பட்ட 15ஆவது வருடத்தில், முள்ளிவாய்க்கால் மண்ணில் நடைபெற்ற தமிழ் இன அழிப்பு நினைவேந்தலில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்திருந்த சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கலமார்டிடம் முள்ளிவாய்க்காலில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்திருந்தார்.
மார்ச் 09 21:09
(முல்லைத்தீவு, ஈழம்)
ஜே.வி.பயின் அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கா, கனடவுக்குப் பயணம் செய்யவுள்ளார். அவரைத் அங்குள்ள புலம்பெயர் தமிழர்கள் சிலர் வரவேற்கவுள்ளதாக செய்திகளும் வெளியாகிக் கொண்டேயிருக்கின்றன. ஜே.வி.பி பற்றிய விம்பம் மிகச் சமீபகாலமாக அரசியல் நோக்கில் கட்டமைக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக இந்தியாவுக்குச் சென்று வந்த பின்னர் ஜே.வி.பியின் பாவங்கள் கழுவப்படுகின்றன. போரால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் சிலர் ஜே.வி.பி மீது நம்பிக்கை வைக்கிறார்கள் புதிய மாற்றம் என்று வேறு சிலர் புகழாரம் சூட்டுகிறார்கள். அனுரகுமார திஸாநாயக்க நல்லவர் வல்லவர் என்றும் சிலர் மார் தட்டுகிறார்கள். சிங்களவர்கள் ஜே.வி.பியை நம்புவதும் விசுவசிப்பதும் வேறு.