அத்துடன் சிங்களக் குடியேறுவதற்குத் தேவையான உதவிகளையும் செய்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
போர் காரணமாக இந்தப் பிரதேசங்களில் வாழந்த மக்கள், 1983 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து வேறு பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் இந்தப் பிரதேசங்களில் 2009 ஆண்டு மே மாதத்தி்ற்குப் பின்னரான சூழலில், இலங்கைப் படையினரின் ஒத்துழைப்புடன் குடியேறியுள்ள சிங்கள மக்கள் காணிகளுக்கான அனுமதிப் பத்திரங்களை வழங்குமாறு மைத்திரி- ரணில் அரசாங்கத்திடம் கேரியுள்ளனர்.
எனினும் காணி அனுமதிப்பத்திரங்களை வழங்க முடியாது என்றும் அந்தப் பிரதேசங்களில் உள்ள காணிகள் தமிழ் மக்களுக்குச் சொந்தமானவை என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
ஆனால், கொழும்பு அரசியல் செல்வாக்கு மற்றும் முல்லைத்தீவில் உள்ள இலங்கைப் படையினரின் ஒத்துழைப்புடன் சிங்கள மக்கள் அங்கு தொடர்ந்து குடியிருப்பதாகவும், இலங்கை மாகாவலி அபிவிருத்தி அதிகார சபை காணி அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளது என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத முல்லைத்தீவுச் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டமை தொடர்பாக முல்லைத்தீவு செயலகத்தில் உள்ள காணிப்பதிவு அதிகாரிக்கு எதுவுமே அறிவிக்கப்படவில்லை.
அதேவேளை, முல்லைத்தீவு செயலகத்தில் உள்ள காணிப்பதிவு அதிகாரிக்கு அறிவிக்காமல் எவ்வாறு இலங்கை மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, முல்லைத்தீவில் உள்ள காணிகளுக்கு அனுமதிப் பத்திரங்களை வழங்க முடியும் என பிரதேச மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.