இவற்றை கையளிக்குமாறு மைத்திரி- ரணில் அரசாங்கத்திடம் பல தடவை கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மின்சார சபை அலுவலக வளாகமும் இலங்கைப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் திடீர் பழுதுகள் ஏற்பட்டாலும் மின்சார சபை ஊழியர்கள் 18 கிலோ மீற்றர் தூரம் பயணித்தே, தமது சேவையை வழங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
வலி.வடக்குப சபைக்குரிய கட்டடம் இலங்கைப் படையின் பாவனையில் உள்ளதால், சபையின் கூட்டங்களுக்காக வேறு கட்டங்களை பெருந்தொகை பணத்தைச் செலுத்தி வாடகைக்குப் பெற வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வலி- வடக்கில் இலங்கைப் படையினரின் பயன்பாட்டில் உள்ள காணிகளில் சுமாா் அறுநுாற்றி என்பது ஏக்கர் காணிகள் கடந்த ஏப்ரல் மாதம் கையளிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
ஆனால் அந்த நடவடிக்கைகள் பின்னா் கைவிடப்பட்டுள்ளன. இதுவரை அதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லையென பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
இலங்கை முப்படையினரை உள்ளடக்கிய இலங்கை ஜனாதிபதி தலைமையிலான செயலணிக் குழவிலேயே, தமிழர் தாயகக் காணிகளை காணிகளை மீளப் பெறுவது பற்றிய அனுமதியை பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குறைகூறியுள்ளார்.
வடமாகாண உள்ள உள்ளூராட்சி சபைகள் பலவற்றின் கட்டங்கள் மற்றும் விவசாயக் காணிகள் பேன்றவற்றை இலங்கைப் படையினர் இன்னமும் தமது பயன்பாட்டில் வைத்துள்ளதாக வலி.மேற்குப் பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும் ஏலவே கூறியிருந்தமை குறிப்பிடத்தப்பது.