இதனால் பாடசாலை மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் நோயாளர்கள் உட்பட பலரும் அச்சத்துடன் பயணிப்பதாக ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையால் நாளாந்தம் பயணிக்கும் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்
போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஊனமுற்றோர் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் மாணவர்கள் உட்பட அதிகளவானோரை தான் அவ்வீதியால் ஏற்றிச் செல்வதாகவும் பல நூற்றுக்கணக்கானோர் குறித்த பாதையை நாளாந்தம் அச்சத்துடன் பயன்படுத்துவதாகவும் இது குறித்து பல தடவைகள் முறையிட்டும் எதுவித பலனும் கிடைக்கவில்லை என விசனம் வெளியிட்டார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் முறிகண்டியிலிருந்து முகமாலை வரை 25க்கும் மேற்பட்ட பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் உள்ளன. இதில் பல முக்கியமான வீதிகள் நாளாந்தம் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயணிக்கின்ற வீதிகளாகவும் காணப்படுகின்றன.
இந்த பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளினால் தொடர்ச்சியாக விபத்துக்களும் உயிரிழப்புக்களும் இடம்பெறுகின்றன.
எனவே, இது தொடர்பாக விரைவில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோருகின்றனர்.