அதேவேளை, 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட குறை நிரப்பிற்கான 1807 பில்லியன் நிதி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து கடனாக பெற்றுக் கொள்ளவது எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அந்தளவு நிதியைப் பெற்றுக் கொள்ள முடியவில்லையென நிதியமைச்சர் மங்கள சமரவீர கடந்த ஓகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான துண்டுவிழும் தொகை 644 பில்லியன் ரூபா என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.1 வீதமாகும்.
கடன்களை குறைக்க நினைத்தாலும் மேலும் கடன்களைப் பெற வேண்டிய நிலையுள்ளது என நிதியமைச்சர் மங்கள சமரவீர ஊடகம் ஒன்றுக்குக் கூறியுள்ளார்.
அமெரிக்கா, ஜப்பான் மற்றும் சர்வதேச நாணய நிதியம். உலக வங்கி போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களிடம் இருந்து குறுகிய, நீண்டகால கடன்கள் மற்றும் நன்கொடைகளை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, 2019ஆம் ஆண்டு கடன் மீளச்செலுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ள இரண்டாயிரத்தி 57 பில்லியன் ரூபாய்ககள் மிக அதிகளவான தொகை என நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறான நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் 2019 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இலங்கை நிதியமைச்சின் மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் ஐந்தாம் திகதி 2019 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிகப்படவுள்ளது. இந்த நிலையில் முன்னோடி மதிப்பீட்டு அறிக்கை அடுத்த அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இது குறித்த விபரங்ளை நிதியமைச்சு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.