பொது மக்கள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைாசா ரவிகரன் மற்றும் கரைதுறைப்பற்று பிதேசசபை உறுப்பினர்கள் என பலர் ஒன்றுகூடி துப்புரவுப் பணிகளை மேற்கொண்டனர்.
தமிழ் இனத்தின் விடிவுக்காக போராடி தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து ஒவ்வொரு வருடமும் கார்த்திகை 27 ஆம் திகதி தமிழ் மக்களினால் மாவீரர் நாள் அனுட்டிக்கப்படுகின்றது.
ஆயுத ரீதியான இன அழிப்புப் போர் நிறைவடைந்த பின்னர் 7 வருடங்களாக தங்கள் உறவுகளை நினைவுகூர முடியாதவர்களாக தமிழ் மக்கள் தவித்து வந்தனர்.
எனினும் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, கடந்த 2016 ஆம் ஆண்டு பொது மக்களால் மாவீரர் துயிலுமில்லங்கள் துப்புரவாக்கப்பட்டு மாவீரர் தின நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.
அதேபோன்று இம்முறையும் தமது உறவுகளை நினைவுகூர்வதற்கு தயாராகி வருவதாக ஈழத்தமிழ் மக்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர்.