சிறிதாய் என்றாலும் தவறாமல் நடந்தேறிய 44வது நினைவேந்தல்
திருகோணமலையில் தியாகி சிவகுமாரன் நினைவுகூர்வு
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாடு
பதிப்பு: 2018 ஜூன் 07 22:20
புலம்: திருகோணமலை, ஈழம்
புதுப்பிப்பு:
ஜூன் 07 22:31
நிருபர் திருத்தியது
ஆசிரியர் திருத்தியது
உறுதிப்படுத்தப்படக்கூடியது
ஆசிரியபீட அங்கீகாரம்
மொழி திருத்திய பதிப்பு
ஈழத் தமிழர்களின் போராட்ட வரலாற்றின் ஓர் ஆரம்ப அத்தியாயத்துக்குரிய தியாகி உரும்பிராய் பொன் சிவகுமாரனின் 44வது நினைவாஞ்சலி நிகழ்வு ஒன்று திருகோணமலையில் கட்டைப்பறிச்சான் இறால் பாலத்தில் செவ்வாய் மாலை 5:15 மணியளவில் நடைபெற்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் அக்கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் திரு இரா ஸ்ரீ ஞானேஸ்வரன் நினைவுரையாற்றினார். அதனைத் தொடர்ந்து நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு கங்கையில் விடப்பட்டது.
மூதூர் பிரதேசசபை உறுப்பினர் திரு சத்தியன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட செயலாளர் திரு குகன், மாவட்ட இணைப்பாளர்களில் ஒருவரான திரு கரன் ஆகியோரும் பிரதேச மக்களும் கலந்து கொண்டு மலர்களைத் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.