(தூத்துக்குடி, தமிழ்நாடு)
தூத்துக்குடியில் (தமிழ்நாடு) இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து மக்களின் அறப்போராட்டம் நடைபெற்று வந்த வேளையில், இன்று (மே 22, 2018) தமிழக அரசின் காவல்துறையினர் அரச வன்முறை யுக்தியை கையாண்டு போராட்டத்தை சிதைக்க முற்பட்டதில் பத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர், மேலும் 65 பேர் படுகாயம் அடைந்து தூத்துகுடி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளனர். அறவழிப்போராட்டம் இன்று 100வது நாளை எட்டிய வேளையிலேயே, வன்முறையை அரச அமைப்பினர் கையிலெடுத்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.