ஒக். 22 14:49
(யாழ்ப்பாணம், ஈழம் )
யாழ்ப்பாணம் - இணுவில் கிராமத்தின் இரு பகுதிகளை, கோண்டாவில் பிரதேசத்துடன் இணைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இணுவிலில், இன்று காலை மௌன ஊர்வலத்துடன் கூடிய மௌனப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இணுவில் கந்தசுவாமி கோவிலுக்கு முன்னால் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகிய மௌன ஊர்வலம், உடுவில் பிரதேச செயலகம் வரை சென்று அங்கு மௌனப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு, பின்னர் உடுவில் பிரதேச செயலாளரிடம் போராட்டகாரர்களால் மனுவொன்றும் கையளிக்கப்பட்டது.