கட்டுரை: விளக்கக்கட்டுரை: நிரல்
ஜன. 14 21:07

சர்வதேச நீதியை முற்றாக மறுதலிக்கப்போகும் கனடாவின் தடை

(வவுனியா, ஈழம்) ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்காக நேர்த்தியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பல காரியங்கள் - கடமைகள் சர்வதேச சமூகத்துக்கு இருக்கும் நிலையில், அவசர அவசரமாகக் குறுக்குவழியில் ராஜபக்ச குடும்பத்தை மாத்திரம் தண்டிப்பதாகக் கூறிக் கொண்டு, இலங்கைக்கு ஆறுதலான சமிக்ஞையைக் கொடுத்திருக்கிறது கனடா. இறுதிப் போரில் ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்படுவதையும் பல இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து அவலப்படுவதையும் ஐக்கிய நாடுகள் சபை தடுக்கத் தவறியது. வன்னியில் இருந்து ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச தொண்டு நிறுவனங்கள் இலங்கை இராணுவத்தால் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டுச் சாட்சியம் இன்றி நடந்த போர் என்று சம்பந்தன் 2010 இல் இலங்கை நாடாளுமன்றத்தில் வர்ணித்திருந்தார்.
ஜன. 09 08:30

மிலிந்த மொறகொடவும் புதுடில்லியும்

தமிழ் நாட்டுக்கு ஊடாக இந்தியாவை ஈழத்தமிழர்கள் ஒருபோதும் அணுகக்கூடாது. புதுடில்லியுடன் நேரடியாகத் தமது அணுகுமுறையை ஈழத்தமிழர்கள் கட்டமைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் இந்திய மத்திய அரசின் நிலைப்பாடு. குறிப்பாகச் சோனியாவை மையப்படுத்திய காங்கிரஸ், மோடியை மையப்படுத்திய இந்துத்துவவாத பி.ஜே.பி ஆகிய பிரதான அரசியல் கட்சிகள் ஈழத்தமிழர் தரப்பினருக்குத் தொடர்ந்து வலியுறுத்துகின்ற விடயம் இதுதான். மோடியின் காலத்தில் தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களில் ஒருபகுதியினர் இந்துத்துவவாத சக்திகளின் வலைக்குள் வீழ்த்தப்பட்டு வருகிறார்கள் என்பது தற்போது பகிரங்கமாகி வருகின்றது.
டிச. 31 19:10

13 ஆவது திருத்தச் சட்டத்தை அகற்ற ரணில் திட்டம்

(மட்டக்களப்பு, ஈழம்) பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கம் செய்து இந்தியத் தலையீட்டை இல்லாமல் செய்வதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கம். தற்போது புதுடில்லியில் இலங்கைக்கான தூதுவராக அமைச்சரவை அந்தஸ்த்துடன் பதவி வகிக்கும் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொட 13 ஐ இலங்கை அரசியல் யாப்பில் இருந்து அகற்றுவற்கான திட்டங்களை வகுத்து வருகிறார் என்பதைச் சமீபகால அணுகுமுறைகள் காண்பிக்கின்றன. மிலிந்த மொறகொட 2002 சமாதானப் பேச்சுக் காலத்தில் எவ்வாறு ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கையைத் தரமிறக்கும் சர்வதேச நகர்வுகளில் ரணிலுக்கு விசுவாசமாக செயற்பட்டாரோ, அதனையும் விட கோட்டாபய ராஜபக்ச மிலிந்த மொறகொட மீது அதீத நம்பிக்கை வைத்துச் செயற்பட்டிருந்தார்.
டிச. 17 12:12

ஜெனீவாவை மடைமாற்றிய ரணிலின் சர்வகட்சி மாநாடு

(வவுனியா, ஈழம்) ஜெனீவா மனித உரிமைச் சபையின் மார்ச் மாத அமர்வு ஆரம்பமாவதற்கு இன்னமும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில், இலங்கை தொடர்பாக ஆணையாளர் தயாரிக்கவுள்ள அறிக்கையின் உள்ளடக்கங்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இலங்கை அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்டு மேலதிக முன்னேற்றங்கள் எதிர்பார்க்கப்படும். இப் பின்னணியிலேதான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வகட்சி மாநாட்டைச் சென்ற செவ்வாய்க்கிழமை நடத்தியிருக்கிறார். ஈழத்தமிழர் விவகாரத்தை ஒட்டுமொத்த இலங்கை மக்களின் மனித உரிமைப் பிரச்சினையாக 2015 இல் ரணில் மடைமாற்றியிருந்தார். தற்போது ரணில் முழு அதிகாரம் படைத்த ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், 2015 இன் நீட்சியாகவே இச் சர்வகட்சி மாநாட்டையும் வடக்கு மாகாண உறுப்பினர்களுடன் பேச்சு என்ற நகர்வையும் நோக்க முடியும்.
நவ. 20 22:14

ஒற்றுமையில்லை என்பதன் பின்னால் உள்ள அரசியல்

(வவுனியா, ஈழம்) ஈழத்தமிழர்களை முடிந்தவரை இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்குள் இணைந்து வாழக்கூடிய அளவுக்குச் சில அரச சார்பற்ற நிறுவனங்கள், சர்வதேசப் பிரதிநிதிகள், இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் தூதுவர் எரிக்சொல்கேய்ம் போன்றவர்கள் மற்றும் சில புலம்பெயர் தமிழ் அமைப்புகள் ஊடாக திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. இத் திட்டங்களுக்கு பின்னால் இலங்கை அரசாங்கம் மிக நுட்பமாகச் செயற்பட்டு வருகின்றது. 2009 போருக்கு முன்னர் கையாளப்பட்ட அதே அணுகுமுறைகள் தற்போது மீண்டும் வெவ்வேறு அமைப்புகள் மற்றும் சர்வதேசப் பிரதிநிதிகள் ஊடாகக் கன கச்சிதமாக முன்னெடுக்கப்படுகின்றன.
செப். 21 09:24

புலம்பெயர் இலங்கையர்களா, புலம்பெயர் தமிழர்களா?

(வவுனியா, ஈழம்) புலம்பெயர் தமிழர்கள் என்பது தற்போது புலம்பெயர் இலங்கையர் (Sri Lankan Diaspora) என்று இலங்கை ஒற்றையாட்சி அரசினால் மிக நுட்பமாக (Very subtle) மடைமாற்றம் செய்யப்பட்டு வருகின்றது. லண்டனில் ரணில் விக்கிரமசிங்க தமிழ்ப் புலம்பெயர் பிரதிநிதிகளைச் சந்தித்தாரா இல்லையா என்று தெரியாது. ஆனாலும் தமிழ் அமைப்புகளையும் சேர்த்தே சிங்கள - ஆங்கில ஊடகங்கள் புலம்பெயர் இலங்கையர்கள் என்று சித்தரிக்கின்றன. ஆகவே ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்களில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்குபற்றினார்களா இல்லையா என்பதைப் புலம்பெயர் அமைப்புகள் உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும். ரணில் விக்கிரமசிங்கவை லண்டனில் உள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புகள் சந்திப்பதற்கு வாய்ப்புகள் இருந்ததாகத் தெரியவில்லை.
செப். 08 09:10

போர்க்குற்றவாளிகள் வெளிநாடுகளுக்குச் சென்றால் அந்தந்த நாடுகளில் விசாரணை நடத்தும் புதிய பொறிமுறை

(மட்டக்களப்பு, ஈழம்) ஈழத்தமிழர்களின் இன அழிப்பு விசாரணைக் கேரிக்கைகள் மாத்திரமல்ல, போர்க்குற்றங்களுக்கான சர்வதேச விசாரணைப் பொறிமுறையைக்கூட நீத்துப் போகச் செய்யும் நோக்கிலேயே ஜெனீவா மனித உரிமைச் சபையும் அமெரிக்கா போன்ற மேற்குலகமும் ஐரோப்பிய நாடுகளும் மற்றும் இந்தியாவும் செயற்படுகின்றன என்பது தற்போது பகிரங்கமாகவே வெளிப்பட்டுள்ளன. யுனிவேர்சல் யூறிஸ்டிக்சன் (Universal Jurisdiction) எனப்படும் முழு நிறை நியாயாதிக்க விசாரணை என்பதன் ஊடாகப் போர்க் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் விசாரணை செய்யப்பட வேண்டுமென ஜெனீவா மனித உரிமைச் சபை ஆணையாளர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் பரிந்துரைத்துள்ளார். இப் பரிந்துரை சர்வதேச விசாரணை என்பதில் இருந்து கீழ் இறங்கிவரும் ஏற்பாடாகவே காணப்படுகின்றது.
செப். 03 14:47

விடுதலைப் போராட்டத்தைத் திரைப்படமாக எடுக்க முற்படுவோர் கவனிக்க வேண்டியதென்ன?

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழ்த்தேசிய அரசியல் விடுதலைப் போராட்டம், தமிழர் வாழ்வுரிமை மறுப்புத் தொடர்பான கோட்பாட்டு விளக்கங்களை மையமாகக் கொண்டது. அதனைக் குழப்புவதற்கான புவிசார் அரசியல் - பொருளாதாரப் பின்னணிகளும் உண்டு. ஆகவே தேசிய விடுதலைப் போராட்டம் தொடர்பாகப் படம் எடுக்க முற்படுவோர் இப் பின்புலங்களின் அடிப்படையைக் கொண்டே கதை வசனங்களை அமைக்க வேண்டும். தனியே வன்முறைக் காட்சிகளாக மாத்திரம் காண்பித்து உணர்ச்சிகரமாகச் சித்தரிப்பது வரலாற்றுத் தவறு. ஆனால் தாக்குதலின்போது கையாளப்பட்ட மரபுவழி இராணுவத் தந்திரோபாயங்கள், (Military Strategies) தாக்குதல் உத்திகள் (Attack Tactics) பற்றிய இராணுவ அறிவுரீதியான நுட்பங்களைப் படத்தில் வெளிப்படுத்த வேண்டும்.
ஜூன் 06 08:02

ஒட்டுமொத்த உறவை ஒருமித்த குரலில் உருவாக்க முடியாத தமிழ்த் தேசியக் கட்சிகள் 21 பற்றிக் கூடி ஆராய்வதில் பயனில்லை

(கிளிநொச்சி, ஈழம்) ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்றபோது, அமைதிகாத்த ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள், தற்போது ரணில் விக்கிரமசிங்கவை அமைச்சரவைக்குள் விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர். இலங்கைக்கு நிதி வழங்க வேண்டுமானால், அரசியல் ஸ்திரத் தன்மையும், (Political Stability) உறுதியான பொருளாதாரத் திட்டங்களை (Economic mechanism) முன்மொழிய வேண்டுமென உலக வங்கி, சர்வதே நாணய நிதியம் உள்ளிட்ட நிதி வழங்கும் நிறுவனங்கள் கடும் அழுத்தங்கள் கொடுத்து வரும் நிலையில், மீண்டும் அரசியல் குழப்பங்களை உருவாக்கும் அரசியல் கைங்கரியங்கள் ஆரம்பித்துவிட்டன போலும். இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நியமன விடயத்தில் ரணில் விக்கிரமசிங்க கோட்டாபய ராஜபக்சவுடன் முரண்பட்டுள்ளார்.
மே 19 09:56

மாநில அரசுகளுக்குரிய நிர்வாக அதிகாரங்களைத் துஸ்பிரயோகம் செய்த தமிழக ஆளுநர் - வெளிப்படுத்திய பேரறிவாளனின் விடுதலை

(யாழ்ப்பாணம், ஈழம்) இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி படுகொலை வழங்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த பேரறிவாளன் முப்பத்தியொரு ஆண்டுகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த விடுதலையின் மூலம் மத்திய - மாநில அரசுகளின் சட்ட அதிகாரத்தை புதுடில்லி ஆட்சியாளர்களின் அரசியல் தேவைகளுக்காக மாநில ஆளுநர் ஒருவர் பயன்படுத்தியிருக்கிறார் என்பது வெளிப்பட்டுள்ளது. பேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழ் நாட்டு மாநில அரசுக்கே உண்டு என்று இந்திய உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளதோடு, தமிழ்நாட்டு ஆளுநரின் அரசியல் ரீதியான செயற்பாடுகள் பற்றியும் கடும் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.