கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
மார்ச் 09 21:09

ஜே.வி.பியின் பாவங்களைக் கழுவ முற்படும் சக்திகள்

(முல்லைத்தீவு, ஈழம்) ஜே.வி.பயின் அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கா, கனடவுக்குப் பயணம் செய்யவுள்ளார். அவரைத் அங்குள்ள புலம்பெயர் தமிழர்கள் சிலர் வரவேற்கவுள்ளதாக செய்திகளும் வெளியாகிக் கொண்டேயிருக்கின்றன. ஜே.வி.பி பற்றிய விம்பம் மிகச் சமீபகாலமாக அரசியல் நோக்கில் கட்டமைக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக இந்தியாவுக்குச் சென்று வந்த பின்னர் ஜே.வி.பியின் பாவங்கள் கழுவப்படுகின்றன. போரால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் சிலர் ஜே.வி.பி மீது நம்பிக்கை வைக்கிறார்கள் புதிய மாற்றம் என்று வேறு சிலர் புகழாரம் சூட்டுகிறார்கள். அனுரகுமார திஸாநாயக்க நல்லவர் வல்லவர் என்றும் சிலர் மார் தட்டுகிறார்கள். சிங்களவர்கள் ஜே.வி.பியை நம்புவதும் விசுவசிப்பதும் வேறு.
பெப். 19 20:27

கொழும்புச் சந்திப்பில் மறுத்த இந்தியத் தூதுவர் யாழ்ப்பாணததில் நடத்திய உரையாடல் எதற்காக?

(யாழ்ப்பாணம், ஈழம்) சிங்கள அரசியல் கட்சிகளையும் தமிழ்த்தேசியக் கட்சிகளையும் சந்தித்து வரும் இந்தியா, இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் தனக்குரிய நலன்களை இலங்கையிடம் இருந்து பெற்று வரும் நிலையில் அல்லது அதற்கான பேரம் பேசல்களை நடத்திக் கொண்டு இலங்கைத்தீவை இந்தியாவின் மற்றொரு மாநிலமாகக் கருதுகின்றதா என்ற கேள்விகள் எழுகின்றன. ஏற்கனவே இக்கேள்விகள் பலரிடமும் உண்டு. ஆனாலும், மிகச் சமீபகாலமாக அக் கேள்விகளை நிரூபிக்கும் வகையில் இலங்கைத்தீவு மீதுதான் இந்தியாவின் சுய நல அக்கறையைக் காண முடிகின்றது.
பெப். 12 21:29

டில்லி - ஜே.வி.பி உறவு ஈழத்தமிழர்களுக்குச் சொல்லும் செய்தி

(யாழ்ப்பாணம், ஈழம்) பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டுமென இந்தியாவில் தூதுவராக இருந்த மிலிந்த மொறகொட கூறிய கருத்தை இந்தியா ஏற்றுள்ளது அனுரகுமார திஸாநாயக்காவை புதுடில்லிக்கு அழைத்துப் பேசியமை இதற்குச் சான்றாகவுள்ளது. தூதுவராகப் பதவியேற்பதற்கு முன்னரும் பதவியிலிருந்து விலகி கொழும்புக்கு வந்த பின்னரும் பதின்மூன்றை ரத்துச் செய்ய வேண்டும் எனவும் மாகாண சபைகள் முறையை முற்றாக ஒழிக்க வேண்டும் என்றும் மிலிந்த மொறொகொட கூறியிருந்தார். அனுரகுமார திஸாநாயக்காவை புதுடில்லிக்கு அழைத்துப் பேசியிருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், மூன்று பிரதான கருத்துக்களை ஜே.வி.பி ஏற்க வேண்டும் என வலியுறுத்திருக்கிறார்.
ஜன. 29 21:38

காசா இன அழிப்புப் போர் குறித்த இடைக்காலத் தீர்ப்புச் சொல்லும் செய்தி

காசாவில் நடந்து கொண்டிருக்கும் போரில் இழைக்கப்படும் குற்றங்களை இன அழிப்பைத் தடுப்பதற்கான உலகளாவிய நீதிச் சட்டகத்தின் ஊடாக சர்வதேச நீதிமன்றம் கையாள வேண்டும் என்றும் இன அழிப்பில் இஸ்ரேல் ஈடுபட்டிருப்பது விசாரிக்கப்படவேண்டியது என்றும் தென்னாபிரிக்கா முன்வைத்த வழக்கின் நியாயாதிக்கம் நம்பத்தகுந்ததாக இருப்பதாகவும் நீதிமன்றம் கருதி, அதன் அடிப்படையில் இடைக்காலத் தடையுத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வழங்கிய இடைக்காலத் தீர்ப்பு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்று சட்ட அறிஞர்களும் மனிதாபிமான சமூகத்தினரும் வரவேற்றுள்ளனர். இஸ்ரேல் தான் செய்வது இன அழிப்பு அல்ல என்று மறுத்துரைத்துள்ளது.
ஜன. 26 14:37

கருத்துச் சுதந்திரமா? அது கிரிமினல் குற்றம்

(மட்டக்களப்பு, ஈழம்) அரசாங்கத்தால் அவசரமாக முன்மொழியப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தின் ஆபத்துக்களை ஊடக அமைப்புகளும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களும் சுட்டிக்காட்டியபோதும், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் அதனைச் செவிமடுக்கும் நிலையில் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் 12 (1) ஆவது சரத்தை வெவ்வேறு வழிகளில் மீறுவதற்கு இடமளிக்கக்கூடும் என்று ஊடக அமைப்புகள் எச்சரித்துள்ளன. இணையப் பாதுகாப்பு எனப்படும் நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை மீறும் ஒருவர் கிரிமினல் குற்றவாளியாகக் கருதப்படும் ஆபத்தும் உண்டு.