கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
ஜன. 07 08:02

தமிழ்த் தேசியப் பரப்பின் கவனத்தை ஈர்த்துள்ள பேராசிரியர் ரகுராமின் உரை

(யாழ்ப்பாணம், ஈழம்) மாற்றங்களுக்கும் ஏமாற்றங்களுக்குமிடையே நம்பிக்கை தரும் ஓர் உரையாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் ஞாயிறன்று ஆற்றிய மாமனிதர் குமார் பொன்னம்பலம் நினைவுப் பேருரை அமைந்துள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படும் நிகழ்வில் இம்முறை மக்கள் முன்னணி முன்வைத்துள்ள தமிழ் மக்கள் பேரவையின் திட்டத்தில் உள்ள குறைபாட்டையும் சுட்டிக்காட்டிய ரகுராமின் உரை பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. செல்வராஜா கஜேந்திரன் வழங்கிய நன்றியுரையில் அவற்றை வரவேற்றும் உள்ளார். இந்த வரவேற்பு உண்மையான சுயவிமர்சனங்களுக்கு இடங்கொடுக்கும் மாற்றத்திற்கான அறிகுறியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜன. 04 20:57

பத்து ஆண்டுகளின் பின் மீண்டும் ஈழத்தமிழர் தரப்பை மேற்கின் ஆழ்நிலைத் தரப்புகள் குறிவைக்கின்றன

(யாழ்ப்பாணம், ஈழம்) 2015 ஆம் ஆண்டு வட மாகாணசபை தமிழ் இன அழிப்புக்கான சர்வதேச நீதி கோரிய தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றியது. அதைப் பெருத்த வில்லங்கமான நகர்வாக புவிசார் அரசியலில் ஈடுபட்டிருந்த சர்வதேச தரப்புகள், குறிப்பாக மேற்கு நாடுகளின் தரப்புகள் கணிப்பிட்டன. ஏனெனில், வெறும் மனித உரிமை மீறல்களாகவும், போர்க்குற்றங்களாகவும், மனிதத்துவத்துக்கெதிரான குற்றங்களாகவும் இலங்கையில் போரில் ஈடுபட்டிருந்த இரு தரப்புகளையும் குற்றங்களிற் சமப்படுத்தி தமது புவிசார் நலன்களுக்கு ஏதுவான ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தும் தமது நிகழ்ச்சிநிரலுக்கு நேர் முரணான நிலைப்பாட்டை ஈழத் தமிழர் விடுதலை அரசியலில் உயிர்த்தெழச் செய்யும் வலு அந்த வட மாகாணசபைத் தீர்மானத்துக்கு இருந்தது.
ஜூலை 01 13:50

கருவிலேயே தவறுகிறதா தமிழ்த் தேசியப் பேரவை முயற்சி? அதைக் காப்பாற்ற வழி ஏதும் உண்டா?

(முல்லைத்தீவு) ஈழத்தமிழர்களுக்கென்று தனியாக அடையாளப்படுத்தப்பட்ட மரபுவழித்தாயக உரிமையை அவர்கள் தொடர்ச்சியாகக் கோரி வந்துள்ளார்கள். இது ஈழத்தமிழர் தேசியத்துவத்தின் முதலாவது அச்சாணி நிலைப்பாடு. ஒரு தனித்துவமான தேசிய இனமாகத் தமது அரசியல் வேணவாவை அவர்கள் முன்வைத்துப் போராடி வந்துள்ளார்கள் என்பது இரண்டாது அச்சாணி நிலைப்பாடு. மறுக்கப்படவொண்ணாத் தன்னாட்சியுரிமையின் அடிப்படையைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளார்கள் என்பது மூன்றாவது அச்சாணி அடிப்படை. இந்த மூன்று தூண்களுக்கும் அடுத்தபடியாக இரண்டு தூண்களாக மொத்தம் ஐந்து தூண்கள் அடிப்படையானவை. இந்த ஐந்து தூண்களையும் நினைவுபடுத்தி, தமிழ்த் தேசியப் பேரவை முயற்சி எதுவித கோப தாபங்களுக்கும் அப்பாற்பட்டு அணுகப்படவேண்டும்.
மே 29 16:20

ஈழத்தமிழரின் அரசியல் விடுதலைக் கருத்தியலும் பொது வேட்பாளரும் எவ்வாறு ஒத்திசையலாம்?

(வவுனியா, ஈழம்) இலங்கைத் தீவில் ஈழத்தமிழர் தேசத்தின் தன்னாட்சியுரிமையுடனான இறைமைக் கோட்பாட்டைச் சிதைத்து உள்ளக விவகாரமாக மாற்றிவிடவேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்கள் ஒரு புறமும் தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்களுடன் இரகசிய ஒப்பந்தங்களை ஒளித்து மேற்கொள்வதில் கைதேர்ந்த தமிழர்களின் தேசிய ஏமாற்றுக் கட்சிகள் மறுபுறமுமாக இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தெரிவில் ஈழத்தமிழர்களின் பொதுவேட்பாளர் முன்வைக்கவேண்டிய கருத்தியலை குட்டிச் சுவராக்கும் சிதைப்பு நடவடிக்கைகளைத் திரைமறைவில் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். இந்தச் சிதைப்பைத் தாண்டிய நிலையில் பொதுவேட்பாளர் எனும் கருத்தியல் வெற்றிபெறவேண்டுமானால் நடக்கவேண்டியது என்ன என்ற கேள்விக்குத் துரிதமாக தெளிவான தெளிவுபடுத்தல் அவசியமாகிறது.
மார்ச் 09 21:09

ஜே.வி.பியின் பாவங்களைக் கழுவ முற்படும் சக்திகள்

(முல்லைத்தீவு, ஈழம்) ஜே.வி.பயின் அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கா, கனடவுக்குப் பயணம் செய்யவுள்ளார். அவரைத் அங்குள்ள புலம்பெயர் தமிழர்கள் சிலர் வரவேற்கவுள்ளதாக செய்திகளும் வெளியாகிக் கொண்டேயிருக்கின்றன. ஜே.வி.பி பற்றிய விம்பம் மிகச் சமீபகாலமாக அரசியல் நோக்கில் கட்டமைக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக இந்தியாவுக்குச் சென்று வந்த பின்னர் ஜே.வி.பியின் பாவங்கள் கழுவப்படுகின்றன. போரால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் சிலர் ஜே.வி.பி மீது நம்பிக்கை வைக்கிறார்கள் புதிய மாற்றம் என்று வேறு சிலர் புகழாரம் சூட்டுகிறார்கள். அனுரகுமார திஸாநாயக்க நல்லவர் வல்லவர் என்றும் சிலர் மார் தட்டுகிறார்கள். சிங்களவர்கள் ஜே.வி.பியை நம்புவதும் விசுவசிப்பதும் வேறு.