(வவுனியா, ஈழம் )
இலங்கைத் தலைநகர் கொழும்பு காலிமுகத்திடலில், சீன அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட சங்ரில்லா ஏழு நட்சத்திர ஹோட்டேலில், சீன இராணுவத்தின் 91 ஆவது சம்மேளன நிகழ்வு இன்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கேட்டபய ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆனால் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பங்குபற்றவில்லை.
எனினும் மைத்திரி- ரணில் அரசாங்கத்தரப்பில் இருந்து அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, அர்ச்சுன ரணுதுங்க, ஜோன் அமரதுங்க, ஆகியோரும் ஈபிடிபி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபல விஜயரட்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.