(மன்னார், ஈழம்)
போர்க் காலங்களில் இலங்கைப் படையினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் இறுதிப் போரின்போது இலங்கைப் படையினரிடம் சரணடைந்தும் ஒப்படைக்கப்பட்ட நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக சர்வதேச விசாரனை அவசியம் என வலியுறுத்தி மன்னார் நகரில் இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்புப் பேரணி ஒன்று நடைபெற்றுள்ளது. மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலிருந்தும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள். மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர். அத்துடன் மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை மற்றும் அருட் தந்தையர்கள் பலரும் இந்தப் பேரணியில் பங்குபற்றினர்.