(சென்னை, தமிழ் நாடு)
தூத்துக்குடியில் அறவழியில் திரண்டு 100 நாட்களுக்கும் மேலாக போராடிக்கொண்டிருந்த பெருந்திரள் மக்கள், அறவழிப்போராட்டத்தின் நூறாவது நாளை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்ற, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி செல்ல முயன்ற வேளையிலேயே, கல்வீச்சு சம்பவங்களும் காவல்துறையினரின் கட்டுபாடற்ற வன்முறையினாலும், காவல்துறையினரின் தொடர் துப்பாக்கி பயன்பாட்டாலும் 12 ற்கும் மேற்பட்டோர் படுகொலையாகினர். 65 ற்கும் மேற்பட்டோர், மீள முடியா உடல்பாதிப்பில் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர். மே 22 ஆம் நாள் இரவு தூத்துக்குடியில் இருக்கும் சில மீனவ கிராமங்களில் காவல்துறை தொடர் தேடுதல் வேட்டைகளை நடத்தி அப்பாவி மக்களை அச்சுறத்திய சம்பவமும் நடந்தேறியுள்ளது.