கைதிகளின் விடுதலைக்காக தீக்குளிப்பேன் என போராட்டத்தில் கலந்துகொண்ட 70 வயதான வே.தவமணி என்ற வயோதிபப் பெண் ஒருவர் கண்ணீர்மல்கக் கூறினார்.
கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர், மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தினர்.
நீண்டகாலமாக விசாரணைகள் எதுவுமே இன்றி பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.
இலங்கை அரசாங்கத்தைக் கண்டிக்கும் சுலோக அட்டைகளையும் அவர்கள் கைகளில் ஏந்தியிருந்தனர். யாழ்ப்பாணம் வவுனியா, மன்னார் கொழும்பு ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில், முதன் முறையாக யாழ்ப்பாணத்தில் யாழ் நகருக்கு வெளியே கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆசிவேண்டி இன்று பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் தீபம் ஏற்றி வழிபாடும் இடம்பெற்றது.
அதேவேளை, உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக உறவினர்கள் கூறுகின்றனர்.
நாளை திங்கட்கிழமை வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.