(சென்னை, தமிழ் நாடு)
தமிழகத்தின் சமூக நீதி கொள்கையினை தகர்த்து, இதுவரை காலமும் தமிழகத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த மருத்துவத் துறையின் சமத்துவத் தன்மையை சிதைக்கும் விதமாக, இந்திய ஒன்றிய அரசினால் திணிக்கப்பட்ட மருத்துவப் படிப்பிற்கான கட்டாய நுழைவுத் தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இத்தேர்வில், தமிழகத்தை சேர்ந்த கீர்த்தனா, அகில இந்திய ஒன்றிய அளவில் 12வது இடத்தை பிடித்திருக்கிறார். இருப்பினும், 1,70,000 மாணவ, மாணவிகள் எழுதிய இத்தேர்வில் தமிழகத்தில் 38.7% பேர் தகுதிப் பெற்றிருக்கின்றனர்