நிரல்
செப். 04 16:02

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை கொழும்பில் உள்ள பிரித்தானிய பிரதித் துாதுவரும் உயர் அதிகாரிகளும் பார்வையிட்டனர்

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கையில் சீன அரசின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், பிரித்தானிய அரசின் கொழும்பில் உள்ள இலங்கைக்கான பிரதித் தூதுவர் டிம்பேர்ன் (Tom Burn) தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட குழவினர் அம்பாந்தோட்டைத் துறைமகத்துக்குச் சென்று பார்வையிட்டுள்ளார். அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை தற்போது நிர்வகிக்கும் இலங்கை, சீன அதிகாரிகள் பிரித்தானியாவின் பிரதித் தூதுவரையும் அவருடன் சென்ற குழுவினரையும் வரவேற்று உரையாடியுள்ளனர். இது தொடர்பாக கொழும்பில் உள்ள பிரித்தானியத் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளது.
செப். 04 10:23

மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் சிங்களக் குடியேற்றங்கள்- கொழும்பு நிர்வாகத்தின் கீழ் திட்டங்கள்

(யாழ்ப்பாணம், ஈழம் ) நல்லாட்சி என தம்மைத்தாமே கூறிக் கொண்டு 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதவிக்கு வந்த மைத்திரி- ரணில் அரசாங்கத்திலேதான் வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் மிக மிக வேகமாகத் தீவிரமடைந்ததாக வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார். மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் முல்லைத்தீவு. வவுனியா மாவட்டங்களில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறவில்லையென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனரட்ன கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார். அதற்குப் பதிலளித்த ரவிகரன், மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இலங்கையின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர்தான் மைத்திரிபால சிறிசேன என்றும் குறிப்பிட்டார்.
செப். 03 23:22

யாழ் மாவட்டத்தில் நான்காயிரத்தி 500 ஏக்கர் காணிகள் இலங்கை இராணுவத்திடம்- நிதிக்குழுக் கூட்டத்தில் மேலதி அரச அதிபர்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் நாடாளுமன்ற நிதிக்குழுவின் கூட்டம் முதன் முறையாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை முற்பகல் இடம்பெற்றுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றிருந்த நிலையில், இன்று யாழப்பாணத்தில் நடபெற்றுள்ளது. நிதிக்குழுவின் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கொழும்பில் இருந்து சென்ற சிங்கள உயர் அதிகாரிகள் மற்றும் நிதிக்குழு உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சரவணபவன் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டு அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த விடயங்களுக்கு நிதி ஒதுக்குவதில் உள்ள பிரச்சினைகள் மற்றும் தேவையான நிதிகள் தொடர்பாக ஆராய்ந்தனர்.
செப். 03 20:15

மன்னார் போர்க்கால மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி தொடர்ந்து நடைபெறுகின்றது- இதுவரை 97 எலும்புக்கூடுகள் மீட்பு

(மன்னார், ஈழம்) மன்னார் நகர நுழைவாசலில் உள்ள இலங்கை அரசாங்கத்துக்குச் சொந்தமான சதோச விற்பனை நிலைய வளாகத்தில் போர்க்கல மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று திங்கட்கிழமை 62 ஆவது நாளாகவும் இடம்பெற்றன. இதுவரை நூற்றிப் பதினொரு மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன் 97 மனித எலும்புக் கூடுகள் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு பொதியிடப்பட்டுள்ளன. அதேவேளை அகழ்வுப் பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். எலும்புக் கூடுகளில் அதிகளவு மண்டையோடுகள் காணப்படுவதால் அடையாளம் காணப்பட்ட எலும்புக் கூடுகளை மீட்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். பெண்கள் பயன்படுத்தும் காப்புகள், மாலை, போன்ற மனித எச்சங்கள் மாத்திரமே தடயப் பொருட்ளாக மீட்கப்பட்டுள்ளன.
செப். 03 15:15

வலி.வடக்குப் பிரதேச சபைக்கு சொந்தமான ஏழு கட்டடங்கள் இலங்கைப் படையின் கட்டுப்பாட்டில்- தவிசாளர் முறைப்பாடு

(யாழ்ப்பாணம், ஈழம் ) யாழ்ப்பாணம் வலி.வடக்குப் பிரதேச சபைக்கு சொந்தமான ஏழு கட்டடங்கள் இலங்கைப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளதாக சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்துள்ளார். பாடசாலைகள் அரச கட்டங்கள் பலவற்றை இலங்கை இராணும் பயன்படுத்துவதாகவும் அவற்றை பொதுமக்களிடமும் வலி வடக்கு பிரதேச சபையிடமும் கையளிக்க வேண்டும் என சுகிர்த்ன் வலியுறுத்தயுள்ளார். வலி வடக்கு பிரதேச சபையின் தலைமைக் கட்டடம் இதுவரை கையளிக்கப்படவில்லை. சபையின் காங்கேசன்துறை அலுவலகத்திற்குரிய நூல் நிலையம், சிறுவர் பூங்கா, வாடிவீடு ஆகியவற்றில் இலங்கைப் படையினர் தங்கியுள்ளனர். அத்துடன் குரும்பசிட்டி, வசாவிளான், காங்கேசன்துறை ஆகிய மூன்று மைதானங்களும் இலங்கைப் படையினரின் பாவனையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செப். 02 23:00

ஜப்பான் அமைச்சர்களின் வருகையின் பின்னர் சம்பந்தன் உள்ளிட்ட இலங்கை நாடாளுமன்றக்குழு இந்தியாவுக்குப் பயணம்

(வவுனியா, ஈழம் ) தமிழ்ததேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட இலங்கை நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் குழு ஒன்று இந்தியாவுக்குப் பயணம் செய்யவுள்ளது. அதேவேளை, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இந்திய ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமனியன் சுவாமியின் அழைப்பை ஏற்று இந்தியாவுக்குச் செல்லவுள்ளார். எதிர்வரும் 12 ஆம் திகதி புதுடில்லியில் இடம்பெறும் நிகழ்வு ஒன்றில் மஹிந்த ராஜபக்ச உரையாற்றவுள்ளார். இந்தியாவுக்குச் செல்லவுள்ள இலங்கை நாடாளுமன்றக்குழு எதிர்வரும் ஒன்பதாம் திகதியில் இருந்து பத்தாம் திகதி வரை இந்தியாவில் தங்கி நிற்கவுள்ளது. மஹிந்த ராஜபக்சவின் பயணமும் சம்பந்தன் உள்ளிட்ட இலங்கை நாடாளுமன்றக் குழுவின் பயனமும் வெவ்வேறானவை என இலங்கை நாடாளுமன்றச் செயலாளர் கூறுகின்றார்.
செப். 02 14:58

காஞ்சூர மோட்டைக் கிராமத்தில் மீளக்குடியேற இலங்கை வன இலாகா திணைக்களம் தடை- மக்கள் முறைப்பாடு

(வவுனியா, ஈழம் ) வடமாகாணம் வவுனியா மாவட்டத்தின் வடக்கு எல்லைக்கிராமங்களான காஞ்சூர மோட்டை, காட்டுப் பூவரசங்குளம், நாவலர் பாம் ஆகிய பூர்வீக நிலங்களில் தமிழ் மக்கள் மீளக் குடியேறுவதற்கு இலங்கை வன இலாகா அதிகாரிகளும் இலங்கை இராணுவப் புலனாய்வாளர்களும் தொடர்ச்சியாக தடையேற்படுத்தி வருவதாக மக்கள் முறையிட்டுள்ளனர். இந்த நிலங்கள் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் என்றும் இங்கு வாழந்த நூற்றுக்கனக்கான குடும்பங்கள் போர்க்காலத்தில் இடம்பெயர்நததாகவும் கிராம அதிகாரிகள் கூறுகின்றனர். இந்தப் பிரதேசங்களில் குறிப்பிட்ட சில குடும்பங்கள் ஏலவே தமது நிலங்களில் குடியேறியுள்ளனார். ஆனாலும் பல குடும்பங்கள் சொந்த நிலங்ளில் மீளக்குடியேற முடியாமல் தவிப்பதாகவும் இலங்கை இராணுவப் புலானாய்வுப் பிரிவினர் தடுத்து வருவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
செப். 01 22:30

வவுனியா பிரஜைகள் குழுத் தலைவர் இலங்கைப் பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரால் விசாரனைக்கு அழைப்பு

(வவுனியா, ஈழம் ) காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கு- கிழக்கு தமிழர் தாயத்தில் தொடர்ச்சியாக நடத்தி வரும் போராட்டங்களை இலங்கை இராணுவத்தின் புலான்யவுப் பிரிவு அவதானித்து வருவதாக முறையிடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் அமைத்த ஆணைக்குழுக்கள் மற்றும் விசாரனைக்குழுக்கள் முன்னிலையில் துணிந்து சாட்சியமளிக்கும் உறவினர்களும் கன்காணிக்கப்புக்கு உட்படுத்தப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழவிலும் மற்றும் பொது அமைப்புகளிடம் உறவினர்கள் ஏலவே முறையிட்டிருந்தனர். இந்த நிலையில் வவுனியா பிரஜைகள் குழுவின் தலைவர் கோபாலகிருஸ்ணன் ராஜ்குமாருக்கு இலங்கைப் பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸார் விசானைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
செப். 01 08:13

கிழக்குக் கரைக்கு அப்பால் எண்ணெய் வள ஆய்வு ஆரம்பம்- அமெரிக்க நிறுவனத்திடம் கையளித்தது மைத்திரி-ரணில் அரசு

(மட்டக்களப்பு, ஈழம்) திருகோணமலையின் கடல் பகுதியை மையப்படுத்திய எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் பற்றிய ஆய்வு நடவடிக்கைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ளன. பனாமா நாட்டுக் கொடியுடன் இயங்கும் BGP Pioneer என்ற ஆய்வுக் கப்பல் இன்று சனிக்கிழமை கொழும்புத் துறைமுகத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் கிழக்குக் கரைக்கு அப்பால் அமைந்துள்ள JS5 மற்றும் JS6 ஆகிய வலயங்களில் ஐயாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்குப் பயணம் செய்து, இந்தக் கப்பல் கடலடியில் உள்ள நில அதிர்வு அலைகளை ஆராயவுள்ளது. எண்ணெய் மற்றும் இயற்கை வாயு வளம் குறித்து ஆராய்வதற்காக Schlumberger என்ற பாரிய எண்ணெய் வயல் சேவை நிறுவனத்தின் கிளை நிறுவனமான Eastern Echo DMCC உடன் மே மாதம் இலங்கை ஒப்பந்தம் ஒன்றைச் செய்திருந்தது.
ஓகஸ்ட் 31 15:26

மஹிந்தவை மையப்படுத்திய கூட்டு எதிர்க் கட்சியுடன் மைத்திரியின் சுதந்திரக் கட்சி இணைய வேண்டுமென அழைப்பு

(மட்டக்களப்பு, ஈழம்) மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலக வேண்டும், இல்லையேல் கட்சியில் இருந்து ஏற்கனவே விலகிய ஏனைய 15 உறுப்பினர்களும் மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தைக் கைப்பற்றவுள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் டிலான் பெரரே தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு டிலான் பெரேரா எச்சரிக்கையும் விடுத்துள்ளார். கட்சியின் வருடாந்த மாநாட்டுக்கு முன்னர் மைத்திரி- ரணில் அரசாங்கதில் இருந்து விலகுமாறும் மைத்திரிபால சிறிசேன அதற்கு இடமளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.