(மட்டக்களப்பு, ஈழம்)
கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காட்டுவளங்களுக்கு இனம் தெரியாத நபர்கள் தீ மூட்டுவதனால், காட்டில் உள்ள வளங்கள், உயிரினங்கள் அனைத்தும் அழிந்துபோவதாக பொத்தானை தமிழ் பிரிவு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் ச.தவநாதன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராமங்களில் ஒன்று பொத்தானையாகும். கடந்த காலங்களில் தமிழர்கள் மாத்திரம் வாழ்ந்த பகுதியில் 2007ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில், வேறு சமூகத்தவர்கள் தமிழர்களின் காணிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பலாத்காரமாகக் குடியேறி தமிழர் பாரம்பரிய பிரதேசங்களின் அடையாளங்களை மாற்றி வருவதாவும் அவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.