(வவுனியா, ஈழம்)
ஒற்றையாட்சி அரசியல் யாப்பை ஈழத்தமிழர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பிரயத்தனமும், அதற்கு ஏதுவாக தமிழ் முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகளை ஊக்குவிப்பதும் இலங்கை அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்று பிரபல கல்வியாளர்களும், தமிழ்ச் சட்டத்தரணிகளும் தெரிவித்துள்ளனர். இந்துசமய விவகாரப் பிரதியமைச்சராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இஸ்லாமியரான காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டமை குறித்து யாழ் பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர்களான கலாநிதி கே.ரி கணேசலிங்கம், கலாநிதி எஸ்.ரகுராம், அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் மற்றும் சட்டத்தரணிகளான காண்டீபன், சத்தியகுமார் ஆகியோர் கூர்மை செய்தித் தளத்திற்குக் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இதனிடையே இந்த நகர்வுகளின் பின்னணிகள் பற்றிய அறிவின் தேவை மேலும் அதிகரித்துள்ளது.