(யாழ்ப்பாணம், ஈழம் )
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து நடத்தப்பட்ட வழக்கு விசாரனைகள் பூர்த்தியடைந்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனரட்ன தெரிவித்தார். மஹிந்த ராஜபகச தொடர்பான ஊழல் மோசடிகளை விசாரனை செய்வதற்கு உருவாக்கப்பட்ட விசேட நீதிமன்றத்தில் 18 வழக்குகள் விசாரிக்கப்பட்டு பூர்த்தியடைந்துள்ளன.
ஆகவே மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் குற்றமிழைத்தவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்கான காலம் நெருங்கியுள்ளதாக அமைச்சர் ராஜித சேனரட்ன கூறியுள்ளார். கொழும்பில் சென்ற புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்த அமைச்சர் ராஜித சேனரட்ன, மஹிந்த மீதும் பல ஊழல் மோசடிகள், அதிகார துஸ்பிரயோங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.