நிரல்
செப். 20 22:15

தனித்தமிழ் அறிஞர் புலவர் கி.த.பச்சையப்பன் சென்னையில் காலமானார்

(சென்னை, தமிழ்நாடு) தனித்தமிழியப் பேரறிவாளர் என தமிழகமெங்கும் பரவலாக அறியப்பட்ட, தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழகத் தமிழாசிரியர் கழக முன்னாள் தலைவருமான புலவர் கி.த.பச்சையப்பன் வழக்கொன்றிற்காக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இன்று (20.09.2018) வந்திருந்தபொழுது அங்கேயே காலமானதாக தமிழக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புரட்சிக் கவி பாரதிதாசன் மீது மாறாத பற்றுக்கொண்டவர். மறைமலையடிகள் - பாவாணர் - பெருஞ்சித்திரனார் போன்ற தனித்தமிழறிஞர்களின் வழியில் இறுதிவரை களப்பணியாற்றிய இவர், தமிழகம் மற்றும் ஈழத்தமிழர்களுக்கான போராட்டங்கள், தமிழ் வழிக் கல்விக்கான தொடர் போராட்டங்கள் என எல்லாவற்றிலும் தன் இறுதி மூச்சு வரை உறுதியுடன் களத்தில் நின்றவர் என சமூக, அரசியல் இயக்கத் தலைவர்கள் புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
செப். 20 15:33

அம்பாறையில் பொதுமக்களின் 300 ஏக்கர் காணிகளில் இலங்கை இராணுவம், வன இலாக திணைக்களம்

(அம்பாறை, ஈழம்) கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் இலங்கை இராணுவம், இலங்கை அரசின் வன இலாக திணைக்களம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ளதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர். சுமார் முந்நூறு ஏக்கர் காணிகள் இலங்கை இராணுவத்தின் பாதுகாப்புடன் பொதுமக்கள் செல்ல முடியாதவாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச செயலாளர்கள் பிரிவுகளில் உள்ள பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளை இலங்கை இராணுவம், இலங்கை வன இலகா திணைக்களம் உரிமை கோரியுள்ளது. இது தொடர்பாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
செப். 20 09:18

மாங்கேணியில் கடல்சார் வளங்கள் பாதுகாப்புத் தினம் அனுஷ்டிக்கப்பட்டது- மாணவர்களும் பங்கேற்பு

(மட்டக்களப்பு, ஈழம்) சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் மற்றும் தேசிய கடல்சார் வளங்கள் பாதுகாப்புத் தினம் மாங்கேணியில் அனுஸ்ட்டிக்கட்டது. கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் கீழ் உள்ள மட்டக்களப்பு மாவட்ட கரையோர பாதுகாப்புப்பிரிவின் நெறிப்படுத்தலில் மாங்கேணி கரையோரப்பகுதி சுத்தம் செய்யப்பட்டது. சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் மற்றும் தேசிய கடல்சார் வளங்கள் பாதுகாப்புத் தினம் நேற்று புதன்கிழமை மாங்கேணியில் அனுஸ்ட்டிக்கட்டது. கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் கீழ் உள்ள மட்டக்களப்பு மாவட்ட கரையோர பாதுகாப்புப்பிரிவின் நெறிப்படுத்தலின் மாங்கேணி கரையோரப்பகுதி சுத்தம் செய்யப்பட்டது.
செப். 19 13:35

முல்லைத்தீவில் கடும் வரட்சி, முப்பதாயிரம் குடும்பங்கள் பாதிப்பு- விவசாயச் செய்கைகள் நிறுத்தம்

(முல்லைத்தீவு, ஈழம்) முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள எண்ணாயிரத்தி 103 குடும்பங்களுக்கு குடிதண்ணீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. வரட்சி நிவாரணம் முதல் கட்டமாக ஆறாயிரத்தி 824 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக ஏழாயிரத்தி 296 குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளது. வரட்சி தொடருமாக இருந்தால் பயிர்ச்செய்கைகள் மோசமாகப் பாதிக்கப்படும். இவ்வாறு முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். முல்லைத்தீவில் நிலவும் கடும் வரட்சி காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகள் தொடர்பாக நேற்றுச் செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
செப். 19 10:16

மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிராமங்களை சுவீகரிக்கும் சிங்கள அதிகாரிகள்- மக்கள் முறைப்பாடு

(மன்னார், ஈழம்) மன்னார் மாவட்டம் மடு பிரதேச செயலக பிரிவுகளில் இலங்கை அரசினால் அனுமதிப் பத்திரங்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளை இலங்கை வன இலாக பாதுகாப்புத் திணைக்களம் உரிமை கோரி வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் பொதுமக்களின் காணிகளில் இலங்கை வன வள பாதுகாப்புத் திணைக்களம் எல்லைக்கற்களை நாட்டி மக்களை தினமும் மிரட்டி வருவதாகவும் பிரதேச மக்கள் கூறுகின்றனர். மன்னார் மாவட்டத்தில் காடும் காடுசார்ந்த நிலப்பரப்பாக மடு பிரதேச செயலக பிரிவில் உள்ள கிராமங்கள் அமைந்துள்ளன. இந்தக் கிராமங்களைச் சேர்ந்த பொது மக்களுக்கு சொந்தமான காணிகள் அனைத்தும் தமது திணைக்களத்திற்கு சொந்தமானது என இலங்கை வன இலாகா திணைக்களம் கூறி வருகின்றது.
செப். 19 01:42

தமிழகம் உடன்குடியில் கடல்வழி முற்றுகை போராட்டம் நடத்திய மீனவர்கள்

(சென்னை, தமிழ்நாடு) தமிழகத்தில், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டணம் அருகே உள்ள உடன்குடி கல்லாமொழியில், கட்டப்படும் அனல்மின்நிலைய திட்டத்தை கைவிடக்கோரியும் கப்பல்களில் கொண்டு வரப்படும் நிலக்கரி பொதிகளை இறக்குவதற்கு வசதியாக, கல்லாமொழி கடற்கரையில் இருந்து 9 கிலோ மீட்டர் தூரத்த நீளத்திற்கு கட்டப்படும் பாலம் மற்றும் இறங்குதளம் பணியை நிறுத்திடவும் வலியுறுத்தி, 17.09.2018 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில், தூத்துக்குடி கடற்கரை கிராமங்களைச் சோ்ந்த திரேஸ்பரம், கால்லாமொழி, ஆலந்தலை, மணப்பாடு உட்பட்ட 26 கிராமங்களைச் சோ்ந்த மீனவர்கள், 380-திற்கும் அதிகமான படகுகளில் கருப்புக்கொடி கட்டி கடல் வழியாக இறங்குதளம் கட்டப்படும் பகுதிக்கு சென்று முற்றுகையிட்டனர்.
செப். 18 22:26

தாழ்வுபாடு, தாராபுரம், தோட்டவெளி, ஓலைத்தொடுவாய் பிரதேசங்களில் காணிகள் சுவீகரிப்பு

(மன்னார், ஈழம்) மன்னார் பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட தாழ்வுபாடு, தாராபுரம், தோட்டவெளி மற்றும் ஓலைத்தொடுவாய் ஆகிய பிரதேசங்களில் உள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை இலங்கை அரசாங்கம் சுவீகரித்து வருவதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர். மன்னார் மாவட்டத்தில் பாரிய காற்றாலை ஒன்றினை நிறுவுவதற்காகவே இந்தக் காணி சுவிகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. காற்று மின்னாலை நிர்மாண வேலைகளுக்காக இதுவரை மன்னார் மாவட்ட மக்களிடமிருந்து 300 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டுள்ளன. குறித்த காணிகள் அனைத்தும் தாழ்வுபாடு தொடக்கம் ஓலைத்தொடுவாய் வரை கடற்கரைய அண்டியுள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளாகும்.
செப். 18 18:51

சியோனிசத்தை முன்னுதாரணமாக்கி இலங்கை அரசு நகரும் அபாயம்

(மட்டக்களப்பு, ஈழம்) இஸ்ரேல் நாட்டின் குடிகளில் இருபது விகிதத்துக்கு மேற்பட்டோர் யூதர் அல்லாத அரேபியர்கள். இந்த வருடம் வரை அங்கு அரேபிய மொழிக்கு இரண்டாவது உத்தியோக பூர்வ மொழி என்ற அந்தஸ்து இருந்துவந்தது. ஆனால், யூலை மாதம் கொண்டுவரப்பட்ட ‘அடிப்படைச் சட்டம்’ (Basic Law) என்ற சட்டவாக்கம் இந்த அந்தஸ்தை யாப்பு ரீதியாகக் குறைத்துள்ளது. தற்போது ஹீப்ரு (எபிரேயம்) மட்டுமே அரச மொழி. அடுத்தபடியாக, இன ரீதியான யூதக் குடியேற்றங்களைப் பரப்புதல் என்ற கோட்பாட்டை தேசியப் பெறுமானமாக்கி (national value) குறித்த சட்டவாக்கம் பெருமிதம் காண்கிறது. அரச காணிகளில் யூதக் குடியேற்றங்களுக்கு முன்னுரிமையும் தனித்துவமும் பேணப்படல் வேண்டும் என்பதே இதன் உட்கிடக்கை என்பதைக் காண்க. ஆக, இஸ்ரேல் கொண்டுவரும் இப்பரிமாணத்தின் சர்வதேச வியூகம் தான் என்ன?
செப். 18 14:10

பருத்தித்துறைக் கடலில் அத்துமீறி நுழைந்த சிங்கள மீனவர்கள்- மடக்கிப் பிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு

(யாழ்ப்பாணம், ஈழம் ) யாழ்ப்பாணம் வடமராட்சி கடற் பிரதேசத்தில் அத்துமீறிச் சட்ட விரோத மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட முற்பட்ட சிங்கள மீனவர்கள் எட்டுப்பேரை, வடமராட்சி மீனவர்கள் மடக்கிப் பிடித்து தடுத்து வைத்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு எற்பட்டுள்ளது. வடமராட்சி பருத்தித்துறை கடற்பரப்பிற்குள் நேற்றுத் திங்கட்கிழமை இரவு நுழைந்தபோதே பருத்தித்துறை மீனவர்கள் எட்டுப் பேரையும் மடக்கிப் பிடித்தனர். இதனையடுத்து பருத்தித்துறையில் உள்ள இலங்கைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. எட்டு சிங்கள மீனவர்களையும் மீட்பதற்காக பிரதேச செயலாளர், கடற்றொழில் நீரியல்வள அதிகாரிகள் ஆகியோர் வடமராட்சி மீனவர்களுடன் பேச்சு நடத்தினர். ஆனாலும் எட்டு மீனவர்களையும் விடுவிப்பதற்கு அவர்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை.
செப். 18 10:14

சிறைச்சாலைகளில் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள்- பொது அமைப்புகள் கண்டனம்

(வவுனியா, ஈழம் ) இலங்கையின் அனுராதபுரம் உள்ளிட்ட தென்பகுதி மற்றும் ஏனைய பிரதேசங்களில் உள்ள சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக மைத்திரி- ரணில் அரசாங்கம் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென கொழும்பில் உள்ள மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளன. தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என பல்வேறு சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அது குறித்து பரிசீலிக்க விரும்பவில்லை என அருட்தந்தை சத்திவேல் குற்றம் சுமத்தியுள்ளார். அதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என கொழும்பில் உள்ள சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.