ஒக். 16 10:17
வவுனியா- காஞ்சூரமோட்டை பகுதியில் குடியேறும் மக்களுக்கும், மக்களது மீள்குடியேற்றம் தொடர்பில் நடவடிக்கை எடுத்துவரும் அதிகாரிகளுக்கும் இல்ங்கை ஜனாதிபதியின் இணைப்பாளர் ஒருவர் கொலை அச்சுறுத்தல் விடுத்து வருவதாக, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற வவுனியா வடக்குப் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின்போதே, சிவசக்தி ஆனந்தன் பகிரங்கமாக இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். போர் காரணமாக இடம்பெயர்ந்து இதுவரை தமது சொந்த இடங்களில் மீள்குடியேறாதுள்ள மக்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறும் போது, வனவளத் திணைக்களம் குறித்த காணிகள் தமக்கு உரியவை எனத் தெரிவித்து காணி உரிமையாளர்களான மக்களுக்கு தொடர்ச்சியாக இன்னல்களை கொடுத்து வருவதாக தெரிவித்தார்.