(சென்னை, தமிழ்நாடு)
தமிழகத்தின் ஆளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கத்தின் தொடரும் அடக்குமுறைகளை, ஜனநாயகத்திற்கு எதிரான போக்கை, இந்திய ஒன்றிய முழுமைக்கும் விளக்கவும், நேச சக்திகளை ஒன்று திரட்டவும் தமிழக கள செயற்பாட்டாளர்கள் கூட்டாக, ஓகஸ்து 4 ஆம் நாள், டெல்லியில் ஊடகவியலாளர்கள் சந்திப்பை நடத்தியுள்ளனர். இதில், சமீபத்தில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, காவல்துறையின் வன்முறை, சேலம்-சென்னை எட்டு வழிச்சாலைக்கு எதிராக போராடும் மக்கள் மீதான அடக்குமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.