செப். 12 23:22
(முல்லைத்தீவு, ஈழம்)
தமிழர் தாயகமான வடக்கு மாகாணத்தில் அதிக கடல்வளத்தைக் கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக்கடல் பகுதியில் அதிகளவான மீன்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் சிறுகடல் பகுதியான நந்திக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பம் மற்றும் அதிக உப்புச்செறிவு காரணமாகவே மீன்கள் உயிரிழந்துள்ளன. இதனால், கடற்கரையோரத்தில் துர்நாற்றம் வீசுவதுடன், மீனவர்களின் மீன்பிடித் தொழிலும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்டுத் தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் மீது, சிங்கள மீனவர்கள் தாக்குதல் நடாத்தி, அவர்களது வளங்களை சூறையாடி, அவற்றை அழித்தொழித்தும் வருகின்றனர்.