செய்தி: நிரல்
ஒக். 09 15:31

தோட்டத் தொழிலாளர்கள் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு கோரி தொடர் போராட்டம்- புறக்கணிக்கப்படுவதாகக் கவலை தெரிவிப்பு

(மன்னார், ஈழம்) நல்லாட்சி எனக் கூறிக் கொண்டு 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆட்சிக்கு வந்த மைத்திரி- ரணில் அரசாங்கம் சம்பளவு உயர்வு விடயத்தில் ஏமாற்றி வருவதாக தோட்டத் தொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சம்பள உயர்வு உடனடியாக வழங்கப்பட வேண்டும் எனக் கோரி இன்று செவ்வாய்க்கிழமை தோட்டத் தொழிலாளர்கள் மலையகத்தின் பல்வேறு இடங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். நாவலப்பிட்டி பிரதான வீதியில் திம்புள்ள சந்தியில் முந்நூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பத்தனை திம்புள்ள தோட்ட தொழிலாளர்கள் உட்பட மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் பலரும் இந்த போராட்டத்தில் பங்குகொண்டனர். ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பைக் கோரி இரண்டு மணி நேரம் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ஒக். 09 14:17

அனர்த்தங்களில் சிக்கி ஒன்பது பேர் பலி- 12 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 49 ஆயிரம் பேர் பாதிப்பு

(வவுனியா, ஈழம் ) வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் தோன்றியிருந்த குழப்பநிலை, தாழமுக்கமாக மாறியுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் இலங்கை முழுவதும் இன்று செவ்வாய்க்கிழமையும் நாளை புதன்கிழமையும் கடும் மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இலங்கையின் மத்திய, சப்ரகமுவ, மேல் மாகாணங்களில் 150 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடும் என வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். கடும் மழை காரணமாக, களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள, அகலவத்த, மத்துகம, பதுரலிய, இங்கிரிய ஆகிய பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. காலி, கேகாலை, பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ஒக். 09 11:05

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அநுராதபுரம் நோக்கி நடை பவனி

(யாழ்ப்பாணம், ஈழம் ) வழக்கு விசாரணைகளின்றி இலங்கைச் சிறைச்சாலைகளில் பத்து வருடங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு, கிழக்கு உட்பட இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. இந்த நிலையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் அநுராதபுரம் நோக்கி மாபெரும் கண்டப்போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தின் பரமேஸ்வரன் ஆலய முன்றலிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை ஒன்றுகூடிய மாணவர்கள், அரசியல் கைதிகளது விடுதலையை வலியுறுத்திய பதாதைகளை ஏந்தியவாறும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எதிர்த்தும் கண்டனப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். மாணவர் ஒன்றிய தலைவர் கே.கிருஷ்ணமேனன் தலைமையில் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
ஒக். 09 08:05

காயாங்கேணி சரஸ்வதி வித்தியாலயத்தின் ஒரு ஏக்கர் காணியை இலங்கை இராணுவம் ஆக்கிரமித்துள்ளது

(மட்டக்களப்பு, ஈழம்) மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்காக வழங்கப்பட்ட பாடசாலை காணியில் இலங்கை இராணுவம் விடுதி அமைத்து களியாட்டம் நடாத்துவதை நிறுத்தி காணியை விடுவிக்குமாறு பாடசாலை அபிவிருத்திச் சங்கத் தலைவர் சி.பிறேம் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காயாங்கேணி சரஸ்வதி வித்தியாலயத்திற்குச் சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் காணியை இலங்கை இராணுவம் ஆக்கிரமித்துள்ளதால் மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்படுவதாக தலைவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.பாடசாலை காணி உட்பட்ட பொதுமக்களின் காணிகள் உட்பட சுமார் நான்கு ஏக்கர் காணியில் இராணுவம் முகாமிட்டுள்ளது. இங்கு சுற்றுலாவிடுதி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
ஒக். 08 16:15

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து அநுராதபுரம் நோக்கி நடைபவனி

(யாழ்ப்பாணம், ஈழம் ) வழக்கு விசாரணைகளின்றி இலங்கைச் சிறைச்சாலைகளில் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கு உட்பட இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் போராட்டங்கள் வலுவடைந்துள்ள நிலையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மாபெரும் கண்டப்போராட்டத்துடன் கூடிய நடைபவனியில் குதித்துள்ளது. யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று முற்பகல் 11.30 அளவில் ஒன்றுகூடிய மாணவர்கள் அரசியல் கைதிகளது விடுதலையை வலியுறுத்திய பதாதைகளை ஏந்தியவாறும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எதிர்த்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒக். 08 00:13

மணியந்தோட்டம் பகுதியில் சட்டவிரோத மண் கடத்தல்காரர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்? பிரதேச மக்களுக்குச் சந்தேகம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) யாழ்ப்பாணம்- அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றவர்கள் மீது அடையாளந்தெரியாதவர்களால் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை 5.30 அளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத மண் கடத்தல் வரையறையின்றி சென்று கொண்டிருக்கும் நிலையில், அதனை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துவருகின்றனர். எனினும் இதுகுறித்து இலங்கைப் பொலிஸார் எவ்வித சட்டநடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லையென பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த நிலையில் சட்டவிரோத மண் கடத்தல்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. சிவில் உடையில் வந்த இருவர், உழவு இயந்திரங்களை நிறுத்துமாறு கட்டளையிட்ட போதும், உழவியந்திரங்கள் வேகமாக தப்பிச் செல்ல முனைந்தது.
ஒக். 07 18:28

கடும் மழையினால் ஐந்துபேர் பலி- எட்டு இலட்சத்து மூவாயிரத்து 516 பேருக்குப் பாதிப்பு

(முல்லைத்தீவு, ஈழம்) இலங்கையில் தொடந்து நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு இலட்சத்து 37 ஆயிரத்து 940 குடும்­பங்­களைச் சேர்ந்த 8 இலட்சத்து மூவாயிரத்து 516 பேர் பாதிப்­புக்­கு உள்ளாகியுள்ளதாக இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இலங்கை நேரப்படி நேற்று சனிக்கிழமை அதிகாலை முதல் பெய்துவரும் கடும்மழையினால் மண்­ச­ரிவு மற்றும் வெள்ளம் கார­ண­மாக 6 வீடுகள் முற்­றாக சேத­ம­டைந்­துள்­ள­துடன் ஆயிரத்து 46 வீடுகள் பகு­தி­ய­ளவில் சேத­ம­டைந்­துள்­ள­தாக இலங்கை இடர் முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது.
ஒக். 06 19:47

கடும் மழையினால் நான்கு பேர் பலி மேலும் 4 பேர் காயம் - எட்டு இலட்சத்து மூவாயிரத்தி 496 மக்கள் பாதிப்பு

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாக இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இலங்கை நேரப்படி இன்று இதிகாலை முதல் பெய்துவரும் கடும்மழையினால் 2 இலட்சத்து 37 ஆயிரத்து 936 குடும்பங்களைச் சேர்ந்த 8 இலட்சத்து 3 ஆயிரத்து 496 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது. மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக 6 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 1042 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
ஒக். 05 22:48

செம்மலையில் இலங்கை வன இலாகாவின் பிடியில் மக்களின் காணிகள்- திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றம்

(முல்லைத்தீவு, ஈழம்) இன அழிப்புப் போரின் 2009 ஆம் ஆண்டின் பின்னரான சூழலில் ஈழத்தமிழரின் பாரம்பரியத் தாயகமான வடக்கு- கிழக்கு பகுதிகளில் உள்ள வளங்கள் உட்பட காணிகள் சூறையாடப்பட்டு அவற்றை அபகரிக்கும் முயற்சி திட்டமிடப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இதன் ஒரு கட்டமாகவே, முல்லைத்தீவு - செம்மலை கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்கான நுாறு ஏக்கர் விவசாய நிலமும் வனவள திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 133 அமர்வி்ன் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அத்துடன் இதனைக் கண்டித்து விசேட கவனயீர்ப்பு பிரேரணை ஒன்றையும் சமர்ப்பித்ததார். பிரேணை இலங்கை வனவள பாதுகாப்பு திணைக்களத்திற்கும் ஆற்றுப்படுத்தப்படவுள்ளது.
ஒக். 05 21:30

சீனாவின் நீர்மூழ்கி ஆதரவுக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில்- இந்து சமுத்திரத்தின் கேந்திர மையம் என்கிறார் அமைச்சர் ஹர்ஷ

(மட்டக்களப்பு, ஈழம்) அமெரிக்கா, ஜப்பான். இந்தியா ஆகிய நாடுகளின் போர்க் கப்பல்கள் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் இருந்து கொழும்பு, திருகோணமலைத் துறைமுகங்களுக்கு வந்து சென்றுள்ள நிலையில், சீன கடற்படையின் நீர்மூழ்கி ஆதரவுக் கப்பல் (Submarine Support Ship) நேற்று வியாழக்கிழமை கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளது. இந்தக் கப்பலின் வருகை நல்லெண்ண பயணம் என கொழும்பில் உள்ள சீனத்துாதரகம் கூறியுள்ளது. இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகம் அனைத்து நாடுகளினதும் கப்பல்கள் வந்து செல்லக் கூடிய வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும் என ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் கஸுயுகி நகானே, (Kazuyuki Nakane) கடந்த ஓகஸ்ட் மாதம் கொழும்பில் கூறியிருந்தார். அது நல்லெண்ண அடிப்படை என்றும் அவர் கூறியிருந்தார்.