ஒக். 04 16:47
(சென்னை, தமிழ்நாடு)
ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாட்டை, தமிழ்நாடு அரசு 28.05.2018 அன்று முடக்கியதன் தொடர்ச்சியாக, வேதாந்தா குழுமம் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுத்து நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக அமைக்கப்பட்ட தருண் அகர்வால் தலைமையிலான ஆய்வுக் குழுவை ரத்து செய்து விட்டு, பொது மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும், ஒக்டோபர் 5, 6 நாட்களில் சென்னையில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த உள்ளதையும் சுட்டிக்காட்டி, தூத்துக்குடியில் இருந்து 600 கி.மீ கடந்து சென்னையில் மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த உள்ளதையும் எதிர்த்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் ஸ்டெர்லைட் எதிர்ப்புக் கூட்டியக்கத்தினர் முறையிட்டுள்ளனர்.