கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
ஒக். 17 20:04

தமிழ்த் தரப்பினால் உருவாக்கப்படவுள்ள புதிய கட்சிகள் பூகோள அரசியலுக்கு ஏற்ப செயற்படுமா?

(கிளிநொச்சி, ஈழம்) பூகோள அரசியல் தாக்கத்தினால் மைத்திரி - ரணில் அரசாங்கத்திற்குள் மோதல்கள் அல்லது முரண்பாடுகள் போன்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்த்தரப்பு எந்தவிதமான அரசியல் தயாரிப்புகளும் இல்லாமல் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்த நிலையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். வவுனியா - சிவபுரத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இந்தக் கருத்தை தெரிவித்தார். வடக்கு- கிழக்கு தமிழர் தாயகத்தை உள்ளடக்கிய திருகோணமலை, முல்லைத்தீவுக் கடற் பிரதேசங்களில் அமெரிக்கா எண்ணெய் வள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றது.
ஒக். 17 15:03

இலங்கை மீதான வல்லரசுகளின் ஆதிக்கம், கொழும்பு அரசியலில் முரண்பாடுகளை உருவாக்கும் பூகோள அரசியல்

(மன்னார், ஈழம்) இந்தியாவின் புலனாய்வுப் பிரிவான றோ தன்னைக் கொலை செய்வதற்கு திட்டமிட்டுள்ளது என்றும் இந்த சதித் திட்டம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனவும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய ஊடகவியலாளர்கள் தொவித்துள்ளனர். ஆனால் மைத்திரிபால சிறிசேன அவ்வாறு கூறவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.
ஒக். 15 00:04

இந்துமா சமுத்திரத்தின் பாதுகாப்புத் தொடர்பான மாநாட்டின் பின்னர் மைத்திரி சீனாவுக்கும் ரணில் டில்லிக்கும் பயணம்

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள அம்பாந்தோட்டைத் துறைமுகம் அனைத்து நாடுகளின் கப்பல்களும் வந்து செல்லக்கூடிய முறையில் மாற்றியமைக்கப்பட வேண்டும் என ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா (Itsunori Onodera) கடந்த ஓகஸ்ட் மாதம் கொழும்புக்குப் பயணம் செய்திருந்தபோது கூறியிருந்தார். இந்த நிலையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இலங்கைக் கடற்படைக் கப்பல்கள், வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் தரித்து நிற்பதற்குரியவாறு தனியான இறங்குதுறை ஒன்றை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக இலங்கைக் கடற்படையின் தலைமை அதிகாரி, றியர் அட்மிரல் பியால் டி சில்வா கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை கூறியுள்ளார்.
ஒக். 13 15:08

சிவசக்தி ஆனந்தனுக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் பத்து மாதங்களுக்கும் மேலாகப் பேச்சுரிமை மறுப்பு

(வவுனியா, ஈழம் ) தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எப் கூட்டமைப்பில் இருந்து விலகியதால் இலங்கை நாடாளுமன்றத்தில் உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தனித்து செயற்படுகின்றார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து அவர் எதிர்க்கட்சி வரிசையில் தனித்து இயங்கி வருகின்றார். இதனால் இலங்கை நாடாளுமன்றத்தில் அவருக்கு உரையாற்றுவதற்கான நேரத்தை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வழங்க மறுத்துள்ளது. இது தொடர்பாக சிவசக்தி ஆனந்தன் நான்கு தடவைகள் நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் சிறப்புரிமைப் பிரச்சனையை முன்வைத்து தனக்குரிய நேர ஒதுக்கீடு தொடர்பாக வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் கடந்த பத்து மாதங்களுக்கும் மேலாக சபாநாயகர் கருஜெயசூரிய நடவடிக்கை எதையுமே எடுக்கவில்லை.
ஒக். 11 07:22

திருகோணமலையை அடுத்து மன்னாரில் மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் அடுத்தகட்ட நகர்வு

(மன்னார், ஈழம்) தமிழர் தாயகமான மன்னார் நகரில் வரலாற்றில் மிகப் பெரியளவில் முதல் தடவையாக இலங்கை இராணுவம் அணிவகுப்பு ஒன்றை நடத்தியுள்ளது. இதனால் மன்னார் நகரெங்கும் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இலங்கை இராணுவத்தினரின் 69 ஆம் ஆண்டு நிறைவையொட்டி நேற்று புதன்கிழமை இந்த அணி வகுப்பு இடம்பெற்றது. வடபுல மாவட்டமான மன்னார் தள்ளாடி பகுதியில் நிலைகொண்டுள்ள இலங்கை இராணுவத்தினரின் 54 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் அணிவகுப்பு பேரணி இடம்பெற்றது. இந்த அணி வகுப்பு புகையிரத நிலைய வீதியில் ஆரம்பித்து மன்னார் பஸார் வீதி ஊடாக தள்ளாடி இராணுவ முகாமை சென்றடைந்தது. இதனால் தமது சொந்த அலுவல்களுக்காக நகருக்கு வந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.
ஒக். 08 12:58

விஜயகலா கைதாகி பிணையில் விடுதலை-தேர்தலை நோக்கிய ஐக்கியதேசியக் கட்சியின் நாடகம் என்கிறது தமிழ்த் தரப்பு

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த யூலை மாதம் 2 ஆம் திகதி இடம்பெற்ற இலங்கை அரசாங்கத்தின் நிகழ்வொன்றின்போது விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என கூறியிருந்தார். இதனால் இலங்கைக் குற்றப்புலனாய்வுப் பிரிவிவு நடத்திய பல கட்ட விசாரணைகளின் பின்னர் இன்று திங்கட்கிழமை முற்பகல் கைதுசெய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக இலங்கைப் பொலிஸ் திட்டமிட்ட குற்றத் தடுப்புப் பிரிவுக்கு சட்டத்தரணிகளுடன் சென்றிருந்தார். அங்கு வாக்குமூலம் வழங்கியபோதே அவர் கைதுசெய்யப்பட்டார்.
ஒக். 07 12:58

இந்துமா சமுத்திரத்தின் பாதுகாப்பு, பயன்பாடுகள் தொடர்பான ஆதிக்கம் யாருக்கு? ஆராய கொழும்பில் சர்வதேச மாநாடு

(மன்னார், ஈழம்) ஈழத் தமிழர்களின் திருகோணமலைத்துறைமுகம், வடக்கு- கிழக்குக் கடற் பிரதேசங்களை பிரதானமாகக் கருதி, இலங்கை இந்தியாவை மையமாகக் கொண்ட இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு மற்றும் பயன்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக இலங்கையின் தலைநகர் கொழும்பில் சர்வதேச மாநாடு ஒன்று நடைபெறவுள்ளது. எதிர்வரும் 11ஆம் 12ஆம் திகதிளில் இடம்பெறவுள்ள மாநாட்டில், இந்தியா, சீனா, ஜப்பான் அமெரிக்க, தென்ஆபிரிக்கா போன்ற நாடுகளின் பிரதான இராஜதந்திரிகள் கலந்துகொள்ளவர். இந்தியப் பிரதி பாதுகாப்பு ஆலோசகர் பங்கஜ் சரண், ஐக்கிய அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் துணைச் செயலாளர் எலிஸ் ஜீ. வெல்ஸ், சீன வெளிவிவகார அமைச்சின் எல்லைத் திணைக்களம் மற்றும் சமுத்திர விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் ஹீ ஷியான்லியாங் ஆகியோர் கலந்துகொள்ளவர்.
ஒக். 02 20:38

ஜப்பான் அரசின் இரண்டு போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தில்- நல்லிணக்கம் என்கிறது ஜப்பான் தூதரகம்

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகம் அனைத்து நாடுகளினதும் கப்பல்கள் வந்துசெல்லக் கூடிய வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும் என ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் கஸுயுகி நகானே, (Kazuyuki Nakane) கடந்த ஓகஸ்ட் மாதம் கொழும்பில் கூறியிருந்தார். அதனையடுத்து ஜப்பான் உதவியின் கீழ் பதினொரு மில்லியன் டொலருக்கும் அதிகமான பெறுமதியுடைய இரண்டு ரோந்து சேவைக் கப்பல்கள் இலங்கை கடல் பாதுகாப்பு திணைக்களத்திடம் செப்ரெம்பர் 13 ஆம் திகதி கையளிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் ஜப்பான் கடற்படையின் உலங்குவானூர்தி தாங்கிக் கப்பல் உள்ளிட்ட இரண்டு போர்க்கப்பல்கள் சென்ற 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளன. இந்த இரு கப்பல்களும் எதிர்வரும் நான்காம் திகதி வியாழக்கிழமை வரை தங்கி நிற்கவுள்ளன.
செப். 26 14:11

இலங்கைக்கு அமெரிக்கா 480 மில்லியன் நிதியுதவி- பூகோள அரசியல் வியூகத்தின் மற்றுமொரு ஏற்பாடு

(மட்டக்களப்பு, ஈழம்) அமெரிக்க நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் திருகோணமலையின் கடல்ப் பகுதியை மையப்படுத்திய எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் பற்றிய ஆய்வு நடவடிக்கைகள் இந்த மாதம் இரண்டாம் திகதி ஆரம்பித்துள்ள நிலையில், இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்காக அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் (Millennium Challenge Cooperation) (MCC) 480 மில்லியன் டொலர் நிதியை வழங்க தானகவே முன்வந்துள்ளது. மூன்று இந்தியக் கடற்படைப் போர்க் கலங்கள் இலங்கைக் கடற்படையுடன் திருகோணமலையில் கடந்த ஆறாம் திகதியில் இருந்து 13ம்திகதி வரை SLINEX-2018 என்ற இணைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. அமெரிக்காவும், ஜப்பானும் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் இதேபோன்ற பயிற்சிகளை இலங்கைக் கடற்படைக்கு திருகோணமலைக் கடற்பரப்பில் வழங்கியிருந்தன.
செப். 24 00:04

முல்லைத்தீவில் அதிகரிக்கும் சிங்களக் குடியேற்றங்கள்- கிழக்கு மாகாண இணைப்பைத் தடுக்க புதிய முயற்சியா?

(முல்லைத்தீவு, ஈழம்) தமிழர் தாயகத்தின் வடமாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டம் வடக்கு கிழக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களை எல்லைகளாகக் கொண்டு அமையப்பெற்றுள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதத்தி்ன் பின்னரான சூழலில் இலங்கையில் மிகவும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மாவட்டமாக பதிவாகியுள்ள முல்லை மாவட்டம், இறுதிக்கட்டப் போரில் இலட்சக்கனக்கான உயிரிழப்புக்களையும் சொத்தழிவுகளையும், சந்தித்தது. ஆனால் கடந்த ஒன்பது ஆண்டுகளில் அந்த மாவட்டத்தில் பாரம்பரியமாக வாழ்ந்த தமிழ் மக்களின் காணிகள் இலங்கை இராணுவம், இலங்கை அரச திணைக்களங்கள் ஆகியவற்றினால் அபகரிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. இது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.