நிரல்
செப். 13 22:37

அமெரிக்காவையடுத்து இந்தியாவின் மூன்று போர்க் கப்பல்கள் திருகோணமலைத் துறைமுகத்தில்- கூட்டுப் பயிற்சியும் நிறைவு

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கை நாடாளுமன்றக்குழு ஒன்று கடந்த ஒன்பதாம் திகதி இந்தியாவுக்குச் சென்றி்ந்த நிலையில் கடந்த ஏழாம் திகதி வெள்ளிக்கிழமை இந்தியாவின் மூன்று போர்க் கப்பல்கள் தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணம் திருகோணமலைத்துறைமுகத்திற்கு வருகை தந்திருந்தன. ஜப்பான் அமைச்சர் கஸுயுகி நகானே, (Kazuyuki Nakane) ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா (Itsunori Onodera) ஆகியோர் கடந்த மாத இறுதியில் அடுத்தடுத்து இலங்கைக்கு வருகை தந்திருந்த நிலையில், அமெரிக்க எண்ணெய் வள ஆய்வும் திருகோணமலைப் பிரதேசத்தை மையப்படுத்திய ஈழத் தமிழர் கடற்பரப்பில் சென்ற ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியுள்ளது. சீன நிறுவனம் ஒன்றிடம் இருந்து வாடகைக்குப் பெறப்பட்ட BGP Pioneer என்ற எண்ணெய் வள ஆய்வுக் கப்பல் ஒன்றும் வந்துள்ளது.
செப். 10 16:25

வவுனியா கனகராயன் குளத்தில் முன்னாள் போராளியும் அவரது மனைவி மகள் மீதும் இலங்கைப் பொலிஸார் தாக்குதல்

(கிளிநொச்சி, ஈழம்) வவுனியா, கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் வாழ்ந்து வரும் முன்னாள் போராளி மீதும் அவரது மனைவி, 14 வயது மகள், கைக்குழந்தை மீதும் கனகராயன் குளத்தில் உள்ள இலங்கைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கடுமையாகத் தாக்கியுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் காயமடைந்த முன்னாள் போராளியான பே.வசந்தக்குமார் அவரது மனைவி அவரது 14 வயது மகள் ஆகியோர் கிளிநொச்சி வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 14 வயது மகளுக்கு வயிற்றில் கடுமையான காயங்கள் உள்ளதால் அதிகளவு இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் கூறுகின்றன.
செப். 10 12:57

அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண தமிழ் மாணவர்கள் கடத்தல் தொடர்பான விசாரணைக்கு முன்னிலையாகவில்லை

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கை முப்படைகளின் பிரதானியும் இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு முன்னிலையாகவில்லை. ஐந்து தமிழ் மாணவர்கள் உள்ளிட்ட பதினொருபேரை கொழும்பில் இருந்து வெள்ளை வானில் கடத்திச் சென்ற பிரதான குற்றவாளியான நேவி சம்பத் எனப்படும் கடற்படை புலனாய்வுப் பிரிவின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டி ஆரச்சி என்பவருக்கு வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல உதவிய குற்றச்சாட்டில் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண, இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூகக் கொள்ளை தொடர்பான விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
செப். 09 22:25

மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகன் இலங்கைப் பொலிஸாரால் திடீரெனக் கைது

(மட்டக்களப்பு, ஈழம்) தமிழ பேசும் மக்கள் வாழும் கிழக்கு மாகாணத்தில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் அத்துமீறல் செயற்பாடுகள், பிரதேச மக்களைப் பாதிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக ஜனநாயக வழியில் போராட்டம் நடத்தி வரும் மட்டக்களப்பு- தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் இன்று ஞாயிற்றுக்கழமை ஏறாவூரில் உள்ள இலங்கைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு- பெரிய புல்லுமலையில் அமைக்கப்படு வரும் போத்தல் குடிநீர்த் தொழிற்சாலையை தடைசெய்யுமாறு கோரி கடந்த வெள்ளிக்கிழமை ஹர்த்தால் இடம்பெற்றது. தமிழ் உணர்வாளர் அமைப்பு இந்தக் ஹர்த்தாலை ஏற்பாடு செய்திருந்தது.
செப். 09 13:57

புதுடில்லிக்குப் பயணம் செய்ய முன்னர் சம்பந்தன் கொழும்பில் உள்ள சர்வதேசப் பிரதிநிதிகளைச் சந்தித்தார்

(மட்டக்களப்பு, ஈழம்) ஜப்பான் அமைச்சர்களின் வருகையின் பின்னர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர். (Hanaa-singer) கொழும்பில் உள்ள கனேடிய தூதுவர் டேவிட் மைக்கினோன் (David McKinnon) ஆகியோரை சந்தித்து உரையாடியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கருடன் நேற்றுச் சனிக்கிழமை சந்திப்பு இடம்பெற்றது. கனேடியத் தூதுவருடனான சந்திப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் இடம்பெற்றுள்ளது. வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து சம்பந்தன் விரிவாக விளக்கமளித்துள்ளதாக தமிழரசுக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
செப். 08 22:59

கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய, பசில் இருவரில் யார்? இருவாரங்களில் முடிவு என்கிறார் வாசு

(வவுனியா, ஈழம் ) மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்சியின் பொது வேட்பாளராக இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்சரவையாக அல்லது முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவையா நியமிப்பது என்பது குறித்து இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினரும் மஹிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பருமான வாசுவே நாணயக்கார தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக கோட்டபய ராஜபக்சவை நியமிப்பதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் இலங்கையின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் பெயரையும் கூட்டு எதிர்க்கட்சி தற்போது பரிசீலித்து வருவதாக வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.
செப். 06 16:57

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏழுவர் குறித்த தீர்ப்பு - விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு

முன்னாள் இந்திய ஒன்றிய பிரதமர் ராஜீவ் காந்தி மரண வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என இந்திய ஒன்றிய உச்சநீதி மன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் அடங்கிய அமர்வு இன்று (06.09.2018) உத்தரவிட்டுள்ளது. 2014இல் வழங்கப்பட்டத் தீர்ப்பிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இந்திய மத்திய அரசு இவ்வழக்கை அரிதிலும் அரிதான வகையில் பார்க்க வேண்டும், ஆதாலால், மாநில அரசுக்கு உரிமை இல்லை என வாதிட்டு வந்த நிலையில், உச்சநீதிமன்ற தமிழக அரசின் அதிகாரத்தை உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
செப். 05 15:11

ஆர்ப்பாட்டத்தின்போது மஹிந்த, கோட்டபய அணியின் மக்கள் பலத்தைக் கண்டு அமெரிக்கா அச்சமடைந்ததா அல்லது ஆதரவா?

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சி இன்று புதன்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட அறிவிப்புத் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதிகளுக்குச் செல்வதை கொழும்பில் உள்ள அமெரிக்கப் பிரஜைகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அமெரிக்கத் தூதரகம் தமது ரூவீற்றர் தளத்தில் அறிவுறுத்தியுள்ளது. பாரிய அளவில் மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தல் மூலம் மஹிந்த ராஜபக்ச அணிக்கு அதிகளவு மக்கள் செல்வாக்கு உள்ளது என்பதை அமெரிக்கா உலகத்துக்கு காண்பிக்க விரும்புகின்றதா என்ற கேள்விகள் எழுகின்றன.
செப். 05 09:18

கிளிநொச்சி நீரேந்துப் பகுதியிலும் இரத்தினபுரம் பாலத்திற்கு அருகிலும் அத்துமீறிய குடியேற்றங்கள்- மக்கள் முறைப்பாடு

(கிளிநொச்சி, ஈழம்) வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்று வருவதாக பல்வேறு முறைப்பாடுகள் குற்றச்சாட்டுக்கள் எழுந்தபோதும், அதனை நிறுத்த மைத்திரி- ரணில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லையென பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் வெவ்வேறு வடிங்களில் மேலும் அத்துமீறிய குடியேற்றங்கள் இடம்பெறுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். தனியார் காணிகள். தரிசு நிலங்களில் வடக்கு- கிழக்கு மாகாணத்திற்கு வெளியில் இருந்து வரும் பலர் கொட்டில்களை அமைத்து குடியிருப்பதாக மக்கள் கூறுகின்றனர். கிளிநொச்சி குளத்தின் நீரேந்து பகுதியும், இரத்தினபுரம் பாலத்திற்கு அருகாகவுள்ள காணிகளிலும் சில நபர்கள் அத்துமீறி கொட்டில்களை அமைத்து குடியிருக்கின்றனர்.
செப். 04 23:41

முல்லைத்தீவு குமுழமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் புத்தார் சிலை அமைக்க முயற்சி - இளைஞர்கள் தடுத்து நிறுத்தினர்

(முல்லைத்தீவு, ஈழம்) வடமாகாணம் முல்லைத்தீவு, குமுழமுனை தண்ணிமுறிப்பு பிரதேசத்தில், தென்பகுதியில் இருந்து சென்ற பௌத்த பிக்குமார் சிலர், அங்கு புத்தர்சிலை ஒன்றை அமைப்பதற்கு முற்பட்டனர். ஆனால் விடயத்தை அறிந்த பிரதேச இளைர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடுத்து நிறுத்தியுள்ளனர். அங்கு வந்த இளைஞர்கள் இது தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசம் என்றும் இங்கு பௌத்த சமயத்தைப் பின்பற்றும் மக்கள் எவரும் வாழவில்லை எனவும் ஆகவே புத்தர் சிலை வைத்து இன மோதலை ஏற்படுத்த வேண்டாம் எனவும் எடுத்துரைத்தனர். குமுழமுனை தண்ணிமுறிப்பு பிரதேசத்தில் உள்ள குருந்தூர் மலைக்கு பௌத்த பிக்குமார் சிலர் சென்று கொண்டிருந்தபோது, பிரதேச இளைஞர்கள் பின்தொடர்ந்து வருவதை அறிந்து தப்பிச் செல்ல முற்பட்டனர்.