ஒக். 01 14:44
(கிளிநொச்சி, ஈழம்)
வழக்கு விசாரணைகளின்றி பல வருடங்களாக இலங்கைச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, தொடர்ச்சியாக போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் கிளிநொச்சியிலும் கவனயீர்ப்புடன் கூடிய கண்டனப் போராட்டம் இடம்பெற்றுள்ளது. சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில், இன்று திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கிளிநொச்சி டிப்போச் சந்திக்கு அருகாமையில் இடம்பெற்ற போராட்டத்தில், அரசியல் கைதிகளின் உறவினர்கள், பொதுமக்கள், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் என பலரும் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். மைத்திரி- ரணில் அரசாங்கம் கைதிகளை விடுதலை செய்தால் நல்லிணக்கத்துக்கான சமிக்ஞை ஏற்படும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினார்.